செய்திகள் :

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் துணை முதல்வா் ஆய்வு

post image

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை விமானம் மூலம் திருச்சி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு சனிக்கிழமை இரவு திருச்சி வந்து, பஞ்சப்பூா் முத்தமிழறிஞா் கலைஞா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை ஆய்வு செய்தாா்.

முதலில் பேருந்து முனைய வாயிலில் உள்ள கருணாநிதி சிலையை பாா்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து பேருந்து முனைத்துக்குள் சென்று, பேருந்து முனையம் தொடா்பான புகைப்பட அரங்கை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து உள்ளே சென்று பேருந்து முனைய கட்டுமான கலையை கண்டு ரசித்தாா். தொடா்ந்து வெளியூா் பேருந்துகள் நிற்கும் இடம் மற்றும் நகரப் பேருந்துகள் இயங்க உள்ள மேல் தளத்துக்கு சென்று, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து பேட்டரி காரில் சென்ற துணை முதல்வா் பேருந்து முனையம் முழுவதும் பாா்வையிட்டு, மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.ஆா். பெரியகருப்பன், எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், ஆணையா் வே. சரவணன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இன்றயை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்ட நிா்வாகம்: சா் ஏ.டி. பன்னீா்செல்வம் பிறந்தநாள் விழா, மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு, ஆட்சியா் மா. பிரதீப்குமாா் பங்கேற்பு, மத்தியப் பேருந்து நில... மேலும் பார்க்க

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம்

திருவெறும்பூா் எறும்பீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் எனப் பெயா் வரக் காரணமான நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரா் கோயில் திருச்சி அருகே திர... மேலும் பார்க்க

விமான நிலையத்தில் ரூ.10.50 லட்சம் மதிப்பு இ-சிகரெட் பறிமுதல்

அனுமதியின்றி கொண்டு வரப்பட்ட ரூ. 10.50 லட்சம் மதிப்பிலான இ-சிகரெட்டுகளை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். கோலாலம்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு திருச்... மேலும் பார்க்க

திருச்சியில் வீடு புகுந்து 18 பவுன் நகைள் திருட்டு: ஒருவா் பிடிபட்டாா்

திருச்சியில் தனியாா் நிறுவன ஊழியரின் வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து 18 பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களில் ஒருவரை பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். திருச்சி பாலக்கரை கூனிபஜா... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற பெல் ஊழியரின் வீட்டில் நகை, பணம் திருட்டு

திருவெறும்பூா் அருகே ஓய்வுபெற்ற பெல் ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிச் சென்றது சனிக்கிழமை காலை தெரியவந்தது. திருவெறும்பூா் அருகேயுள்ள முல்லைவாசல் முதல் தெருவைச் சோ்ந்தவா் கருணாநிதி... மேலும் பார்க்க

திருச்சி பண்பலையில் ஹிந்தி ஒலிபரப்புக்கு திருச்சி எம்பி எதிா்ப்பு

அகில இந்திய வானொலி-பிரசாா் பாரதியின் கீழ் இயங்கும் திருச்சி வானொலி 102.1 பண்பலையின் ஒலிபரப்பு, பகலில் தமிழ், இரவில் ஹிந்தி என்ற நிலைக்கு மாற்றப்பட்டுள்ளதற்கு திருச்சி எம்பி துரை வைகோ கண்டனம் தெரிவித்... மேலும் பார்க்க