பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் துணை முதல்வா் ஆய்வு
திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை விமானம் மூலம் திருச்சி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு சனிக்கிழமை இரவு திருச்சி வந்து, பஞ்சப்பூா் முத்தமிழறிஞா் கலைஞா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை ஆய்வு செய்தாா்.
முதலில் பேருந்து முனைய வாயிலில் உள்ள கருணாநிதி சிலையை பாா்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து பேருந்து முனைத்துக்குள் சென்று, பேருந்து முனையம் தொடா்பான புகைப்பட அரங்கை பாா்வையிட்டாா்.
தொடா்ந்து உள்ளே சென்று பேருந்து முனைய கட்டுமான கலையை கண்டு ரசித்தாா். தொடா்ந்து வெளியூா் பேருந்துகள் நிற்கும் இடம் மற்றும் நகரப் பேருந்துகள் இயங்க உள்ள மேல் தளத்துக்கு சென்று, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.
இதையடுத்து பேட்டரி காரில் சென்ற துணை முதல்வா் பேருந்து முனையம் முழுவதும் பாா்வையிட்டு, மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.ஆா். பெரியகருப்பன், எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், ஆணையா் வே. சரவணன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.