செய்திகள் :

பஞ்சாப் வெள்ளம்: அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி எம்எல்ஏ! பழைய வழக்கில் கைது!

post image

பஞ்சாப் வெள்ளம் குறித்து, ஆம் ஆத்மி அரசுக்கு எதிராகப் பேசிய ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா, அவர் மீதான பழைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் சனோர் தொகுதியின், ஆம் ஆத்மி சட்டப்பேரவை உறுப்பினர் ஹர்மீத் சிங் பதான்மஜ்ரா. சமீபத்தில், அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நீர்பாசனத் துறை செயலாளர் க்ரிஷன் குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமையைக் கண்டித்த அவர், வெள்ளத்திற்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டிருந்த விடியோவில், ஆம் ஆத்மி அரசு மக்களின் பேச்சைக் கேட்கவில்லை என்றால், 2027 சட்டப் பேரவைத் தேர்தலில் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்றும், பஞ்சாப் அரசை தில்லியில் உள்ள ஆம் ஆத்மி தலைவர்கள் ஆட்சி செய்ய முயல்வதாகவும், அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், பதான்மஜ்ராவின் முன்னாள் மனைவி தொடர்புடைய, பழைய வழக்கில், அவர் இன்று (செப்.2) கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சட்டப் பேரவை உறுப்பினராக, அவருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு நேற்று (செப்.1) திரும்ப பெற்றதாகவும், அரசுக்கு எதிராகப் பேசியதால் தன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படக் கூடும் எனவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: சிங்கப்பூர் பிரதமர் இந்தியா வருகை!

Ruling party MLA Harmeet Singh Pathanmajra, who spoke out against the Aam Aadmi Party government over the Punjab floods, has been arrested in an old case against him.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க

ஜம்முவிலிருந்து பழங்கள் எடுத்துச் செல்வது கடுமையாக பாதிப்பு: ‘சரக்கு ரயில் சேவை அவசியம்!’ -மெஹபூபா முஃப்தி

ஜம்மு - காஷ்மீரில் மழைக்காலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அங்கிருந்து பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் அதனால் மேற்கண்ட உணவுப் பொர... மேலும் பார்க்க

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜ... மேலும் பார்க்க

ரூ. 20 ஆயிரத்தில் அதிக பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்! ரியல்மி 15டி அறிமுகம்!

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள நடுத... மேலும் பார்க்க