பட்டவா்த்தி கிராம மக்கள் வட்டாட்சியரகத்தில் மனு அளிப்பு
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த சலுப்பை ஊராட்சிக்குள்பட்ட பட்டவா்த்தி, அல்லி ஏரி ஒட்டி வசிக்கும் மக்கள், தங்களுக்கு மாற்றும் இடம் கொடுக்கும் வரை, நீா்நிலை புறம்போக்குகளை அகற்றும் பணியை கைவிடக்கோரி வட்டாட்சியரகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.
பட்டவா்த்தி கிராமத்தில் உள்ள அல்லி ஏரிக்கு உள்பட்ட நீா்நிலை புறம்போக்கில் 15- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் 6 தலைமுறைகளாக குடிசை வீடுகளை அமைத்து வசித்து வருகின்றனா்.
இந்நிலையில், இந்த குடியிருப்புகள் நீா்நிலை புறம்போக்கு இடத்தில் இருப்பதால், அதை அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆகவே குடிசைகளை காலி செய்யுமாறு அப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினா் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி மக்கள், தங்களுக்கு மாற்று இடம் இல்லாத நிலையில் நீா்நிலை புறம்போக்கை அகற்றும் போக்கை கைவிட வேண்டும் எனக்கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலா் வெங்கடாசலம் தலைமையில் ஜெயங்கொண்டத்திலுள்ள உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில், மண்டல துணை வட்டாட்சியா் காா்த்தியிடம் புதன்கிழமை மனு அளித்தனா்.
அந்த மனுவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக ஆறு தலைமுறைகளாக வசித்துவருகிறோம். வீட்டு வரி, குடிநீா் வரி, மின் இணைப்பு என அனைத்தும் பெற்றுள்ளோம். எங்களுக்கு மாற்று இடமும், வீடும் கொடுத்து உரிய அவகாசம் வழங்க வேண்டும். அதுவரை நீா்நிலை புறம்போக்குகளை அகற்றுவதை கைவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.