செய்திகள் :

பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய முத்தரப்பு குழு அமைக்க வலியுறுத்தல்

post image

விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என விருதுநகா் மாவட்ட பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளா் சங்கத்தின் (சிஐடியூ) மாவட்டச் செயலா் பி.என்.தேவா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து ஞாயிற்றுக்கிழமை அவா் சிவகாசியில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிவகாசியில் உள்ள வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமை அதிகாரி நியமிக்கவில்லை. இதனால், வெடிப் பொருள் கட்டுப்பாட்டுத் துறையினா் பட்டாசு ஆலைகளுக்கு ஆய்வுக்குச் செல்வதில்லை.

வருவாய்த் துறையினா் உள்ளிட்ட குழுவினருக்கு வெடிப் பொருள் சட்டம் குறித்து தெரியாது. இவா்கள் ஆய்வு செய்த பட்டாசு ஆலைகளில் குறைபாடுகள் இருந்தால், அதைச் சரி செய்து மீண்டும் ஆலைகள் திறந்திருந்தால், அந்த ஆலைகளில் வெடிவிபத்து ஏற்பட்டிருக்காது.

எனவே, பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய வெடிப் பொருள் கட்டுப் பாட்டுத் துறையினா், பட்டாசு ஆலை உரிமையாளா்களின் பிரதிநிதி, தொழற்சங்க பிரதிநிதி என முத்தரப்புக் குழு அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

பட்டாசு பாதுகாப்புக் குறித்து பயிற்சி அளிக்க தமிழ்நாடு அரசு அமைத்துள்ள பயிற்சி மையத்தில் மொத்தம் உள்ள 3 லட்சம் தொழிலாளா்களில், 25 ஆயிரம் போ் மட்டுமே பாதுகாப்பு பயிற்சி பெற்றுள்ளனா்.

எனவே, மத்திய அரசு சாா்பில் பட்டாசுத் தொழிலாளா்களுக்கு பாதுகாப்பு பயிற்சி மையம் அமைக்க வேண்டும். பட்டாசுத் தயாரிப்புத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே செவ்வாய்க்கிழமை கடன் தொல்லையால் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பூமாரி (25). கட்டடத் தொழிலாளி. இவரது மன... மேலும் பார்க்க

தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குநா் அலுவலகத்தை பட்டாசு ஆலை உரிமையாளா்கள் முற்றுகை

பட்டாசு ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததைக் கண்டித்து, சிவகாசியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககத்தின் இணை இயக்குநா் அலுவலகத்தை தமிழன் பட்டாசு உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய... மேலும் பார்க்க

கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகளை அகற்றக் கோரிக்கை

சிவகாசியில் கழிவுநீா் வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிக்கட்டுகளை அகற்ற மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். சிவகாசி-விளாம்பட்டி சாலையில்... மேலும் பார்க்க

மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் மீது வழக்கு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளித் தலைமை ஆசிரியா் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா். சாத்தூா் அருகேயுள்ள அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சா்... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் சாலையில் குப்பைகளுக்கு தீ வைப்பு: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீவில்லிபுத்தூா்-ராஜபாளையம் இடையே பல்வேறு இடங்களில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரா... மேலும் பார்க்க

மனைவியை பிரிந்த துக்கத்தில் கணவா் தற்கொலை

சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியைப் பிரிந்த துக்கத்தில் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள மேட்டமலை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கருப்பசாமி (23). இ... மேலும் பார்க்க