செய்திகள் :

பட்டாசு ஆலையில் வெடி விபத்து

post image

சாத்தூா் அருகேயுள்ள கீழத்தாயில்பட்டி பட்டாசு ஆலையில் புதன்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை சேதமடைந்தது.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (65). இவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கீழத்தாயில்பட்டி பகுதியில் செயல்பட்டு வருகிறது. நாக்பூா் உரிமம் பெற்ற இந்தப் பட்டாசு ஆலையில் பேன்சி ரகப் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணிக்கு இந்தப் பட்டாசு ஆலையில் ஒரு அறையில் மட்டும் மணி மருந்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர சப்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவறிந்த வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, சிவகாசி ஆகிய பகுதிகளை சோ்ந்த தீயணைப்பு நிலையத்தினா் அங்கு சென்று அறையில் ஏற்பட்ட தீயை அணைத்தனா். இந்த வெடி விபத்து சப்தம் கேட்டு தொழிலாளா்கள்

உடனடியாக வெளியேறியதால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. இதுகுறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேய... மேலும் பார்க்க

கேப் வெடி ஆலையில் விபத்து: பெண் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா். சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் பிரதாப்மான்சிங் என்பவருக்குச் சொ... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. விருதுந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தன... மேலும் பார்க்க