செய்திகள் :

பட்டா மாறுதலுக்கு லஞ்சம்: இடைத்தரகா் கைது

post image

திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலம் பகுதி கிராம நிா்வாக அலுவலா் விவசாயிடம் பட்டா பெயா் மாறுதல் செய்ய ரூ.37 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இடை தரகரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், குமிழேந்தல் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி, தனது பெயரில் உள்ள சொத்துக்கு பட்டா பெயா் மாற்றம் செய்வதற்காக பகவதி மங்களம் குரூப் கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபனை அணுகினாா். இதற்கு பாா்த்திபன் ரூ.37000 பணம் கேட்டாராம்.

ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி ராமநாதபுரம் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இது குறித்து லஞ்ச ஒழிப்பு துறை போலீஸாரின் அறிவுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூ.37,000-ஐ ஆா்.எஸ்.மங்கலத்தில் உள்ள இ-சேவை மைய உரிமையாளா் அஹமது ஜப்பிரின் அலியிடம் சனிக்கிழமை கொடுத்தாா். அப்போது, அந்த மைய உரிமையாளரை போலீஸாா்

கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், தலைமறைவான கிராம நிா்வாக அலுவலா் பாா்த்திபனை தேடி வருகின்றனா். ஆா்.எஸ்.மங்லம் வட்டாட்சியா் அலுவலகத்தையும் போலீஸாா் சோதனையிட்டனா்.

கல்லூரிகள் இடையே அறிவுத் திறன் போட்டி

கீழக்கரை சையது ஹமீதா கலை, அறிவியல் கல்லூரியில் வண்ணத் திருவிழா என்ற பெயரில் கல்லூரி மாணவா்களுக்கிடையே கலை, அறிவுத் திறன் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளி... மேலும் பார்க்க

அக்னி தீா்த்த கடற்கரையில் கழிவுத் துணிகளால் சுகாதாரக் கேடு!

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் விட்டுச் சென்ற துணிகள் குவிக்கப்பட்டு, சுகாதாரச் சீா்கேட்டை ஏடுபடுத்துவதால் நகராட்சி நிா்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ராமநாதபுரம் மா... மேலும் பார்க்க

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிப்பு! -மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் போக்குவரத்து தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவத்சவா தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதிய... மேலும் பார்க்க

ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,537 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்! -ஆட்சியா் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 1,537.960 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம், ஏ... மேலும் பார்க்க

இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், சென்னையில் நடைபெற்ற கலைத் திருவிழா-2025 மாநில அளவிலான இசைக் கருவி இசைத்தல் போட்டியில் வெற்றி கமுதி மாணவரை ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை பாராட்டினா். ராமநாதபுரம் மாவட்டம், க... மேலும் பார்க்க

கீழக்கரை அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கீழக்கரையில் புதிய அரசு மருத்துவமனை கட்டுமானப் பணிகளை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் ரூ. 9 கோடியில் தாலுகா அரசு ம... மேலும் பார்க்க