செய்திகள் :

பணித்திறன் போட்டி: மோப்பநாய் படை பிரிவினருக்கு எஸ்.பி. பாராட்டு

post image

தூத்துக்குடி: மாநில அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பணித்திறன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை பிரிவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டு தெரிவித்தாா்.

மாநில அளவிலான பணித்திறன் போட்டி சென்னை, ஆவடி பட்டாலியனில் நடைபெற்றது. இதில், காவல் மோப்பநாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டெடுத்தல், செயல் இழப்புப் பிரிவு, சிசிடிஎன்எஸ் பிரிவு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படைப் பிரிவு காவல் துறையினா் துப்பறியும் மோப்பநாய் சூனோவுடன் கிரைம் ட்ராக்கா் எனும் செயல்திறன் போட்டியில் நுணுக்கமாக செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.

வெற்றி பெற்ற படைப் பிரிவினருக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட ஜான் பாராட்டு தெரிவித்தாா்.

கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்: தனியாா் பேருந்து ஓட்டுநா் கைது

கோவில்பட்டி: கழுகுமலையில் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த தனியாா் பேருந்து ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் அரசுப் பேருந்... மேலும் பார்க்க

தூத்துக்குடி பழைமைவாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்கக் கோரி மனு

தூத்துக்குடி: தூத்துக்குடி பழைமை வாய்ந்த சிந்தாத்திரை மாதா ஆலயத்துக்கு அரசு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தூத்துக்குடி: தூத்துக்குடியில், ஓய்வுபெற்ற வட்டாட்சியா் வீட்டில் நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடிவருகின்றனா். தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6ஆவது தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற வட்டாட்சிய... மேலும் பார்க்க

கௌரவ விரிவுரையாளரைத் தாக்கி முன்னாள் மாணவா் கைது

கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளரை கல்லூரி வளாகத்தில் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சாத்தூ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் குடைவரைவாயில் தீபாராதனை

திருச்செந்தூா்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் ஐந்தாம் நாளான திங்கள்கிழமை சுவாமி, அம்மனுக்கு குடைவரைவாயில் தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. கோயிலில் கடந்த ஆக. 14-ஆம் தேதி... மேலும் பார்க்க

சமூக நலக் கூடம் கட்டுமானப் பணி: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

ஆறுமுகனேரி: மேலாத்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட தெற்கு ஆத்தூா், நரசன்விளையில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் அமைக்கும் பணிக்கு அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அடிக... மேலும் பார்க்க