செய்திகள் :

பணிநீக்க நடவடிக்கையில் துரிதம் காட்டும் அமெரிக்க அரசு!

post image

அமெரிக்காவில் பணிநீக்க நடவடிக்கையிலும் அமெரிக்க அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவில், குறிப்பாக உள்துறை, எரிசக்தி, படைவீரர் விவகாரங்கள், விவசாயம் மற்றும் சுகாதாரம், மனித சேவைகள் ஆகிய துறைகளில்தான் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகக் கூறுகின்றனர். எரிசக்தி துறையில் 1,200 முதல் 2,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அணு ஆயுதக் குழுவை நிர்வகிக்கும் மற்றும் தேசிய அணுசக்தி பாதுகாப்பு நிர்வாகத்திலிருந்து 325 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்க அரசின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும் செயல்திறன் மேம்பாட்டுத் துறையை (DOGE) அதிபர் டொனால்ட் டிரம்ப் நியமித்தார். இந்தத் துறையின் தலைவராக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நியமிக்கப்பட்டார்.

இதையும் படிக்க:வெற்று வார்த்தைகள் அல்ல, வலுவான உற்பத்தித் தளம் தேவை: ராகுல்

அரசு மேற்கொள்ளும் செலவுகளைக் குறைத்தாலே, செயல்திறன் அதிகரிக்கும் என்ற நோக்கில் இந்தத் துறை கவனம் செலுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அதிகளவிலான அரசு ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும்வகையில் பணிநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தாமாக முன்வந்து ராஜிநாமா செய்யும் ஊழியர்களுக்கு 8 மாத ஊதியம் வழங்குவதாக டிரம்ப் அறிவித்தாலும், இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

இந்த பணிநீக்க நடவடிக்கை அமெரிக்காவின் 36 டிரில்லியன் டாலர் கடன் மற்றும் கடந்தாண்டு 1.8 டிரில்லியன் டாலர் பற்றாக்குறையைச் சமாளிக்கத் தேவைப்படும் நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை ஆதரவு தெரிவித்துள்ளது.

ஆய்வுக்கூட கருத்தரித்தல் முறை விரிவாக்கம்: கையெழுத்திட்டார் டிரம்ப்!

அமெரிக்காவில் ஆய்வுக்கூட சோதனை முறை விரிவாக்க உத்தரவில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று (பிப். 19) கையெழுத்திட்டுள்ளார். இயற்கையான முறையில் கருத்தரிப்பதில் சிரமம் உள்ள தம்பதிகள் இன் விட்ரோ ஃபெ... மேலும் பார்க்க

2 குழந்தைகள் உள்பட 4 உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது ஹமாஸ்!

போரின்போது சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேலைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 4 பேரின் உடல்களையும் ஒப்படைப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.காஸா போர் நிறுத்தத்தின் ஒருபகுதியாக இஸ்ரேலைச் சேர்ந்த 6 பிணைக்கைதிகளை வரும் சனி... மேலும் பார்க்க

ரியாத் பேச்சுவாா்த்தை: நல்லுறவை மேம்படுத்த அமெரிக்கா-ரஷியா ஒப்புதல்

உக்ரைன் விவகாரம் தொடா்பாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அமெரிக்கா மற்றும் ரஷியாவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் இருநாட்டு உறவை மேம்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா். உக்... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவத்தால் 200 போ் படுகொலை

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆா்எஸ்எஃப் கடந்த மூன்று நாள்களில் 200 போ் படுகொலை செய்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரை கண்காணித்துவரும் வழக்குரைஞா்கள் குழு செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க

மேலும் 6 பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்

காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வரும் சனிக்கிழமை ஆறு பிணைக் கைதிகளை விடுவிக்கவிருப்பதாக ஹமாஸ் அமைப்பினா் அறிவித்துள்ளனா். அந்த நாளில் மூன்று பிணைக் கைதிகளை மட்டுமே விடுவிக்க அவா்கள் ஒப்பு... மேலும் பார்க்க

காஷ்மீரில் இந்தியா பொது வாக்கெடுப்பு: பாக். நாடாளுமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றம்

சுய நிா்ணய உரிமை மூலம், தங்கள் எதிா்காலத்தை காஷ்மீா் மக்கள் தீா்மானிப்பதற்கு நியாயமான பொது வாக்கெடுப்பை இந்தியா நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட... மேலும் பார்க்க