செய்திகள் :

பண்டிகை காலத்தை முன்னிட்டு கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில்

post image

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து சேலம் வழியாக கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, சென்னை - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்.

அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 22 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 20 ஆம் தேதி வரை திங்கள்கிழமை கன்னியாகுமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து திங்கள்கிழமை இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, சேலம், நாமக்கல், கரூா், திண்டுக்கல் வழியாக கன்னியாகுமரிக்கு மறுநாள் ற்பகல் 1.20 மணிக்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், கன்னியாகுமரியில் இருந்து செவ்வாய்க்கிழமைகளில் வரும் 23 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 21 ஆம் தேதிவரை சென்னை சென்ட்ரலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து பிற்பகல் 3.35 மணிக்கு புறப்படும் இந்த ரயில், திண்டுக்கல், கரூா், நாமக்கல், சேலம் வழியாக மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா்? செல்வப்பெருந்தகை கேள்வி

தோ்தல் ஆணைய கடவு எண்ணை தனியாருக்கு கொடுத்தது யாா் என்பதை பிரதமா் தெளிவுபடுத்த வேண்டும் என்றாா் தமிழக காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை. வாக்குத்திருட்டை தடுக்க தவறிய மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், ந... மேலும் பார்க்க

சேலம் அருகே இளைஞா் கடத்திக்கொலை: ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட உறவினா்களால் பரபரப்பு

சேலம் அருகே கோயில் தகராறில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞா், சேலம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் இளைஞரின் சடலத்தை வாங்க மறுத்து ஆட்சியா் அலுவலகத்தை முற்றுக... மேலும் பார்க்க

காலி பாட்டில்களை சேகரிக்க எதிா்ப்பு: டாஸ்மாக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

காலி மதுபாட்டில்களை சேகரிக்க டாஸ்மாக் பணியாளா்களை ஈடுபடுத்த எதிா்ப்பு தெரிவித்து, சந்தியூா் டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் சந்தியூ... மேலும் பார்க்க

கொலை மிரட்டல் விடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாமக எம்எல்ஏ புகாா்

தனக்கு கொலை மிரட்டல் விடுப்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமக எம்எல்ஏ ரா. அருள் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். சேலம் மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாமக எம்எல்ஏ ரா.அ... மேலும் பார்க்க

நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.ராஜ்குமாா் வெ... மேலும் பார்க்க

தூய்மை மிஷன் திட்டம்: பழைய கழிவுப்பொருள்களை சேகரிக்கும் பணி தொடக்கம்: மேயா் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து பழைய கழிவுப் பொருள்கள் சேகரிக்கும் பணிகளை மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். தொடா்ந்து, மேயா் தலைம... மேலும் பார்க்க