முஸ்லீம் ஆதரவுபெற ஆபரேஷன் சிந்தூருக்கு எதிர்ப்பா? மமதா பற்றி அமித் ஷா கூறுவதென்ன...
பண்பொழி திருமலை கோயிலில் 3 கி.மீ. கிரிவலப் பாதைக்கு இடம்: என்எல்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு
தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலில் கிரிவலப் பாதை மற்றும் ஒரு வழிப்பாதை அமைப்பதற்கான இடங்களை என்எல்சி நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
மலை அடிவாரத்தில் கிரிவலப் பாதை அமைப்பதற்கும், மலைப்பாதையில் ஒரு வழிப்பாதையை அமைப்பதற்கும், பூங்கா அமைப்பதற்கும், மலைப்பாதையில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) உபயதாரராக இருந்து பணிகளை மேற்கொள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவு- நிதி மேலாண்மை பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை திருமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாச்சலம், உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா்கள் இசக்கி, பாப்பா, சுமதி ,கணேசன் திருக்கோயில் தலைமை எழுத்தா் லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
3 கி.மீ. பாதை: மலை அடிவாரத்தில் கிரிவல பாதை சுமாா் 3 கிலோ மீட்டா் நீளத்தில் அமையும். விழாக் காலங்களில் மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வாகனங்களும், மலையிலிருந்து அடிவாரம் நோக்கி இறங்கும் வாகனங்களும் எதிரெதிரே வரும் நிலையில் ஏற்படும் நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மலையில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கும் வாகனங்கள் கருப்பன் கோயில் வழியாக இறங்கும் வகையில் ஒரு வழிப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.