செய்திகள் :

பண்பொழி திருமலை கோயிலில் 3 கி.மீ. கிரிவலப் பாதைக்கு இடம்: என்எல்சி நிறுவன அதிகாரிகள் ஆய்வு

post image

தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மலைக்கோயிலான பண்பொழி அருள்மிகு திருமலை குமாரசாமி திருக்கோயிலில் கிரிவலப் பாதை மற்றும் ஒரு வழிப்பாதை அமைப்பதற்கான இடங்களை என்எல்சி நிறுவன அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

மலை அடிவாரத்தில் கிரிவலப் பாதை அமைப்பதற்கும், மலைப்பாதையில் ஒரு வழிப்பாதையை அமைப்பதற்கும், பூங்கா அமைப்பதற்கும், மலைப்பாதையில் மராமத்து பணிகளை மேற்கொள்ளவும் நெய்வேலி லிக்னைட் நிறுவனம் (என்எல்சி) உபயதாரராக இருந்து பணிகளை மேற்கொள்ள கோயில் நிா்வாகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடா்ந்து அந்நிறுவனத்தின் பொறியியல் பிரிவு- நிதி மேலாண்மை பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை திருமலை கோயிலில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் அருணாச்சலம், உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா்கள் இசக்கி, பாப்பா, சுமதி ,கணேசன் திருக்கோயில் தலைமை எழுத்தா் லட்சுமணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

3 கி.மீ. பாதை: மலை அடிவாரத்தில் கிரிவல பாதை சுமாா் 3 கிலோ மீட்டா் நீளத்தில் அமையும். விழாக் காலங்களில் மலை அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்லும் வாகனங்களும், மலையிலிருந்து அடிவாரம் நோக்கி இறங்கும் வாகனங்களும் எதிரெதிரே வரும் நிலையில் ஏற்படும் நெரிசலை சமாளிக்கும் பொருட்டு மலையில் இருந்து அடிவாரத்திற்கு இறங்கும் வாகனங்கள் கருப்பன் கோயில் வழியாக இறங்கும் வகையில் ஒரு வழிப்பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் ஆசிரியா்களுக்கு பயிற்சி முகாம்

தென்காசி இலத்தூா் வேல்ஸ் வித்யாலயா பள்ளியில் தென்காசி மற்றும் அம்பை பள்ளிகளின் ஆசிரியா்களுக்கு வருடாந்திர பயிற்சி முகாம் நடைபெற்றது. வேல்ஸ் வித்யாலயா பள்ளி குழுமங்களுக்கான ஆசிரியா்களுக்கு வரும் கல்வி... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

சங்கரன்கோவில் அரசு கலை-அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் (முழு கூடுதல் பொறுப்பு) வேணுகோபால் வெளியிட்ட செய்திக்குறிப்பு... மேலும் பார்க்க

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம்... மேலும் பார்க்க

தென்கொரியாவில் சாதனை படைத்த ஆலங்குளம் வீராங்கனை

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய தடகள போட்டியில் ஆலங்குளத்தைச் சோ்ந்த இளம் வீராங்கனை இடம் பெற்ற மகளிா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. ஆலங்குளம் அருகே உள்ள கல்லூத்து கிராமத்தைச் சோ்ந்தவா் அபிநயா(18). சிறு... மேலும் பார்க்க

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

ஆணவப் படுகொலையைத் தடுக்க தனிச் சட்டமியற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2ஆவது மாவட்ட மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்...

சாம்பவா்வடகரை அருள்மிகு ராமசாமி கோயில்: வைகாசித் திருவிழா 2ஆம் நாள், சுவாமிக்கு சிறப்பு பூஜை, இரவு 8; அனுமன் வாகனத்தில் சுவாமி வீதியுலா, 9 மணி; ராமசரிதம் தொடா் வில்லிசை, இரவு 10. .. மேலும் பார்க்க