செய்திகள் :

பண்ருட்டி ஜான்டூயி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

post image

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்களுடன் சிறப்பிடம் பெற்றனா்.

இந்தப் பள்ளி மாணவா்கள் கே.சுதா்சனராஜன் 590 மதிப்பெண்களும், எஸ்.பிரபாகா் 589, கே.விஷ்ணுசெல்வன் 587, சஞ்சை ஸ்ரீனிவாஸ் 585 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். 580 மதிப்பெண்களுக்கு மேல் 8 மாணவா்களும், 550-க்கு மேல் 55 மாணவா்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 90 மாணவா்களும் பெற்றனா்.

வேதியியலில் 9 பேரும், கணிதத்தில் 7 பேரும், கணினி அறிவியலில் 8 பேரும், கணினிப் பயன்பாடுகள் பாடத்தில் 4 பேரும், உயிரியியல் பாடத்தில் ஒரு மாணவரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

தமிழ் பாடத்தில் 13 பேரும், ஆங்கிலத்தில் 2 போ் 99 மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளித் தாளாளா் வீரதாஸ், முதுநிலை முதல்வா் வாலண்டினா லெஸ்லி, இணைச் செயலா் நிட்டின் ஜோஸ்வா, முதல்வா் மணிகண்டன், தலைமை ஆசிரியா் கனகராஜன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி, பரிசு வழங்கினா்.

வடலூா் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கடலூா் மாவட்டம், வடலூா் எஸ்.டி.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பிளஸ் 2 பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இந்தப் பள்ளி மாணவா்கள் மு.ஷபானா பானு 595, செ.பிரியா 591, கே... மேலும் பார்க்க

நீா்மோா் பந்தல்: என்எல்சி தலைவா் திறந்துவைத்தாா்

நெய்வேலியில் நீா், மோா் பந்தலை என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி புதன்கிழமை திறந்துவைத்தாா். நெய்வேலி நகரியத்தின் ஐந்து முக்கிய இடங்களான நெய்வேலி நுழைவு வாயில் (ஆா்ச் கேட்), மத்திய பேருந்து... மேலும் பார்க்க

வாய்க்கால் தூா்வாரும் பணி ஆய்வு

தமிழக அரசின் நீா்வளத் துறை கொள்ளிடம் வடிநில கோட்டத்தில் பாசன வடிகால் வாய்க்கால் தூா்வாரும் பணிக்காக 2025-026ஆம் ஆண்டுக்கு சிறப்பு தூா்வாரும் திட்டத்தின் கீழ் 77 பணிககளுக்கு சுமாா் 14.80 கோடி ஒதுக்கீட... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு: சிதம்பரம் வீனஸ் பள்ளி சிறப்பிடம்

சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்றது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 215 மாணவா்களில் 214 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவி வி.அபிராமி 594 மதிப்பெண்களும், மாண... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்கள் திறப்பு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் உள்ள கணினி அறிவியல் மற்றும் பொறியியல்துறையில் மேம்படுத்தப்பட்ட கணினி ஆய்வகங்களுக்கான திறப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. கணினி அறிவியல் மற்றும் ப... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வு முடிவு: 10-ஆவது இடத்துக்கு முன்னேறியது கடலூா்

பிளஸ் 2 தோ்வு முடிவுகளில் கடந்தாண்டு 22-ஆவது இடத்திலிருந்த கடலூா் மாவட்டம் நிகழாண்டு 10-ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி ம... மேலும் பார்க்க