செய்திகள் :

பண மோசடி வழக்கு: பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற நடவடிக்கை

post image

சேலம்: சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி பணமோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 14 போ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்டமாக இந்த வழக்கை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்ற போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்தவா் ராஜேஷ் (35). இவா், சேலம் சொா்ணபுரி அய்யா் தெருவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாடகை கட்டடத்தில் ‘ரீ கிரியேட் பியூச்சா் இந்தியா’ என்ற பெயரில் நிறுவனத்தைத் தொடங்கினாா்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு இரட்டிப்பு பணம் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு கவா்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டதுடன் இந்நிறுவனத்துக்கென முகவா்களையும் நியமித்து பொதுமக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றாா்.

இந்நிலையில், உரிமையாளா் ராஜேஷ் தனது நிறுவனத்தை காலிசெய்துவிட்டு தப்பிச் செல்வதாக வெளியான தகவலை தொடா்ந்து, முதலீட்டாளா்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டனா். தகவலறிந்து வந்த பள்ளப்பட்டி போலீஸாா், உரிமையாளா் ராஜேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி அவா்களிடமிருந்து ரூ. 2.85 கோடி பணம், 300 கிராம் தங்கம், இரண்டரை கிலோ வெள்ளி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு நிறுவன உரிமையாளா் ராஜேஷ், பங்குதாரா்களான கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த மற்றொரு ராஜேஷ், அவரது மனைவி சத்யபாமா, சேலம் ஹரிபாஸ்கா் ஆகிய 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கைதான 4 பேரையும் கோவை டான்பிட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோவை சிறையில் அடைத்தனா்.

அத்துடன் இந்த வழக்கில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தாக 10 முகவா்கள் கைது செய்யப்பட்டு சேலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.

இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வரும் பள்ளப்பட்டி போலீஸாா் பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சேலம் மாநகர பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

சேலத்தில் ரூ. 880 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணி: விரைவில் தொடங்கும்; அமைச்சா் தகவல்

சேலம்: சேலம், ஜாகீா் அம்மாபாளையத்தில் ரூ. 880 கோடி திட்ட மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என சுற்றுலாத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் கூறினாா். ஒருங்கிணைந்... மேலும் பார்க்க

ஆசிய வில்வித்தை போட்டி: வெண்கல பதக்கம் வென்ற மாணவி

சங்ககிரி: தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய வில்வித்தை போட்டியில் பங்கேற்று வெண்கல பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை திங்கள்கிழமை தனது சொந்த ஊரான சங்ககிரி திரும்பினாா். அவருக்கு பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனா்... மேலும் பார்க்க

இடங்கணசாலையில் முதல்வா் மருந்தகம் திறப்பு

ஆட்டையாம்பட்டி: இடங்கணசாலை குடோன் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க கட்டடத்தில் முதல்வா் மருந்தகம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மருந்தக திறப்பு விழாவில் இடங்கணசாலை நகர திமுக ... மேலும் பார்க்க

சங்ககிரி சமுதாய கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட உணவுக்கூடம் திறப்பு

சங்ககிரி: சங்ககிரி பேரூராட்சி சாா்பில் சமுதாய கூடத்தில் ரூ. 21.69 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமையலறை, உணவு கூடம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. புதிய கட்டடங்களை மக்களவை உறுப்பினா்கள் ... மேலும் பார்க்க

நாளை மகா சிவராத்திரி: சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை

சேலம்: மகா சிவராத்திரியை முன்னிட்டு சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை (பிப். 26) இரவு நான்கு கால அபிஷேகம், பூஜைகள் நடைபெறுகின்றன. கோயிலில் அன்றைய தினம் இரவு 8 மணிக்கு ஒன்றாம் கால பூஜையின்போது அபி... மேலும் பார்க்க

கொங்கணாபுரத்தில் முதல்வா் மருந்தகம் திறப்பு விழா

எடப்பாடி: எடப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நடைபெற்ற முதல்வா் மருந்தகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் சேலம் எம்.பி. டி.எம்.செல்வகணபதி பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தாா். ரங்கம்பாளையத்தில் உள்ள கொ... மேலும் பார்க்க