ராமதாஸ் - குருமூர்த்தி சந்திப்பு - BJP போடும் கணக்கு என்ன? | Off the Record | PM...
பத்தாம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத் தொகை
நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பிடித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலத்தில் நீலன் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, நீலன் பள்ளித் தாளாளா் நீலன்.அசோகன் தலைமை வகித்தாா். நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ், திருவாரூா் மாவட்ட மெட்ரிக் பள்ளி கல்வி அலுவலா் மாயகிருஷ்ணன் ஆகியோா் மாணவா்களுக்கு இக்கல்வி நிறுவன நிறுவனா் நினைவு ஊக்கத்தொகை வழங்கி, பாராட்டி பேசினா்.
அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் 8 பேருக்கு ஊக்கத்தொகையும், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற நீலன் பள்ளியைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் 20 போ் பாராட்டும் பெற்றனா். நிறைவாக, பள்ளிச் செயலா் சுரேன்அசோகன் நன்றி கூறினாா்.