செய்திகள் :

பனி மலையில் 10 நாள்களாக சிக்கிய இளைஞர் - டூத்பேஸ்ட் சாப்பிட்டு உயிரை காப்பாற்றிக் கொண்டது எப்படி?

post image

பனிமலையில் பத்து நாள்களாக சிக்கிக்கொண்ட இளைஞர் ஒருவர், ஆற்று நீர், உருகிய பனி, டூத்பேஸ்ட் ஆகியவற்றை சாப்பிட்டு தன்னை உயிருடன் வைத்திருக்கிறார். எப்படி அந்த மலையில் மாட்டிக்கொண்டார், எப்படி மீட்கப்பட்டார் என்பது குறித்து பார்க்கலாம்..

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, சன் லியாங் என்பவர் தனது சோலோ பயணத்தை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி இருக்கிறார். அப்போது அவர் ஷான்சி மாகாணத்தின் 2500 மீட்டர் உயரத்திற்கு பெயர் பெற்ற குயின்லிங் மலைகளுக்கு நடைபயணம் மேற்கொண்டார்.

Representational image

மலையேற்றம் தொடங்கிய இரண்டு நாட்களில் அவரது மின்னணு சாதனங்களில் பேட்டரி தீர்ந்து போனதால் அவர் தனது குடும்பத்தினருடன் ஆன தொடர்பை இழந்தார். தனிமைப்படுத்தப்பட்டு வெளி உலகத்தை தொடர்பு கொள்வதற்கான வழியையும் இழந்தார்.

இதனை அடுத்து அவர் காணாமல் போனதாக குடும்பத்தினர் நினைத்துள்ளனர். அந்த மலையில் நடைபயணம் மேற்கொண்டபோது அவர் பலமுறை விழுந்து அவரது வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சன் லியாங் கூறியுள்ளார்.

காற்று மற்றும் குளிரில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, ஒரு பெரிய பாறையின் பின்னால், காய்ந்த புல் மற்றும் இலைகளின் உதவியுடன் தனக்கென ஒரு படுக்கையைத் தயார் செய்திருக்கிறார். சாப்பிட உணவு கிடைக்காததால், தன்னிடம் இருந்த டூத்பேஸ்டை சாப்பிட்டு, ஆற்றில் உள்ள தண்ணீரையும் உருகிய பனியையும் குடித்து உயிரை காப்பாற்றிக் கொண்டதாகவும் சன் கூறினார்.

அவரின்குடும்பத்தினர் மீட்புக் குழுவை அணுகிய பிறகு, தேடுதல் ஆபரேஷன் தொடங்கப்பட்டது. பிப்ரவரி 17 அன்று, நெருப்பு மூட்டும்போது, ​​ஏற்பட்ட புகையை வைத்து தேடுதல் குழுவின் கவனத்தை பெற்றார்.

”இந்தப் பாதையில் நடைபயணம் மேற்கொண்டால் கரடிகள், மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகளை மலையேற்றம் செய்பவர்கள் எதிர்கொள்ள நேரிடும். இந்த நடவடிக்கையின் போது எங்கள் மீட்புப் பணியாளர்களில் சிலர் காயமடைந்தனர்” என்று மீட்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் கூறினார்.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, இந்த ஆபத்தான பாதையில் 50க்கும் மேற்பட்ட மலையேறுபவர்கள் காணாமல் போயுள்ளனர் அல்லது உயிரிழந்துள்ளனர் என அவர்கள் கூறினர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Tree Aadhar : மனிதர்களுக்கு மட்டுமல்ல... இந்தியாவின் 'இந்த' இடத்தில் மரங்களுக்கும் ஆதார் உண்டு!

உங்களுக்கும், எனக்கும் ஆதார் நம்பர் இருந்தால் ஓகே... இந்தியாவில் ஒரு மாநிலத்தின் மரங்களுக்கும் ஆதார் நம்பர் கொடுக்கப்பட்டு வருகிறது என்றால், நம்ப முடிகிறதா?! அது வேறு எங்கும் இல்லை... இந்தியாவின் குளு... மேலும் பார்க்க

Tanushka Singh: `பயத்தை உணரவில்லை' - இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானி தனுஷ்கா சிங்

பறக்கும் படை அதிகாரியாக (Flying Officer) பணியாற்றி வந்த தனுஷ்கா சிங், இந்திய போர் விமானப்படையில் ஜாகுவார் போர் விமானத்தின் முதல் நிரந்தர பெண் விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை போர் விமானப்படையில... மேலும் பார்க்க

வளர்ப்பு பூனை இறந்த துக்கம்; இரண்டு நாள்கள் சடலத்துடன்... 3-வது நாளில் விபரீத முடிவெடுத்த இளம்பெண்!

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள ஹசன்பூர் என்ற இடத்தை சேர்ந்த பூஜா என்ற பெண் திருமணமாகி இரண்டாண்டில் விவாகரத்து செய்துவிட்டார். இதையடுத்து தனது பெற்றோர் வீட்டில் தாயாருடன் வசித்து வந... மேலும் பார்க்க

Elon Musk: தனது நிறுவன ஊழியர் சிலிஸ் மூலம் 4வது குழந்தை; 14 குழந்தைக்குத் தந்தையானார் எலான் மஸ்க்

எலான் மஸ்க் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஷிவோன் சிலிஸ் என்ற பெண் ஊழியருடன் நான்காவது குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார்.53 வயதான எலான் மஸ்க், கடந்த 2021ம் ஆண்டு தனது 'நியூரோலிங்க்' நிறுவனத்தில் பணிபு... மேலும் பார்க்க

பற்றி எரிவது அடுத்தவர் வீட்டுக்கூரைதானே என்று ஆசுவாசமாக இருந்தீர்களென்றால்... | Must Read

அடுத்தவரின் துன்பத்தைக்கண்டு நகைக்கிற இயல்பு நம் மனங்களுக்குள் எப்போது நுழைந்தது..? பாதிக்கப்பட்டவர்களின் ரணம் ஆறுமுன், 'நான் எவ்ளோ பெரிய நியாயக்காரன் தெரியுமா' என்பதை நிரூபிக்கிற அளவுக்கு இதயம் கல்லா... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `தொகுதி மறுசீரமைப்பு சர்ச்சை டு சாம்பியன்ஸ் டிராபி' - இந்த வார கேள்விகள் இதோ..!

மக்கள் தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு, மகா கும்பமேளா, ரஷ்யா - உக்ரைன் போர் மூன்றாண்டுகள் நிறைவு, சாம்பியன்ஸ் டிராபி தொடர் என இந்த வார சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப்பாக இ... மேலும் பார்க்க