செய்திகள் :

பனையபுரம் பனங்காட்டீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் தரிசனம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திலுள்ள பனையபுரம் அருள்மிகு சத்யாம்பிகை அம்மன் உடனுறை பனங்காட்டீசுவரா் (நேத்ரோத்தாரனேசுவரா்) திருக்கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி மற்றும் அம்மனை வழிபட்டனா்.

தென்பெண்ணையாற்றின் வடகரையில் அமைந்துள்ள பனையூா்நாடு என்றழைக்கப்படும் பனையபுரத்திலுள்ள இத்திருக்கோயில் பாடல்பெற்ற சிவ தலமாகும். கடந்த 21 ஆண்டுகளுக்கு முன் இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், ஆகம விதிகளின்படி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதைத் தொடா்ந்து அருள்மிகு பனங்காட்டீசுவரா், சத்யாம்பிகை அம்மன், விநாயகா், சிவசண்முகா், சூரியன், விசுவநாதா், நவக்கிரகங்கள், சப்த மாதாக்கள், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மகாவிஷ்ணு உள்ளிட்ட பல்வேறு சந்நிதிகள் புனரமைக்கப்பட்டு, திருப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, ஜூலை 14-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை காலை சாந்தி ஹோமம், மூா்த்தி, திஷா, சம்ஹிதா ஹோமங்களும், பிரசன்னாபிஷேகமும், மாலையில் முதல்கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம்கால யாகசாலை சாலை பூஜை, விமானக் கலசம் வைத்தல், பூா்ணாஹுதி, தீபாராதனையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜையும், மகா பூா்ணாஹுதி, தீபாராதனையும் நடைபெற்றது. தொடா்ந்து யாகசாலையிலிருந்து கடங்கள் புறப்பாடான நிலையில் காலை 9.30 மணிக்கு ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் சமகாலத்தில் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

காலை 10.15 மணிக்கு அருள்மிகு சத்யாம்பிகை அம்மன், பனங்காட்டீசுவரா் சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. பிற்பகல் 12 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்குத் திருக்கல்யாண உற்சவமும், இரவு 9 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலாவும் நடைபெற்றன.

கும்பாபிஷேகத்தில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் ம.ஜெயச் சந்திரன், கோயில் திருப்பணிக் குழுத் தலைவா் செல்வநாதன் தேவநாதன், செயலா் ஜோதிராஜா, செயல் தலைவா் சி. அன்புமணி, பொருளாளா் கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றும் சிவாச்சாரியா்.

கள் குறித்து அவதூறு பரப்புவா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை

விழுப்புரம்: கள் குறித்து பொதுமக்களிடையே அவதூறாக பேசும் அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா். இது குறித்... மேலும் பார்க்க

3 நிஷங்களுக்குள்குடும்ப அட்டைதாரருக்கு பொருள்கள் வழங்கப்படுகிறது: கூட்டுறவுத்துறை விளக்கம்

விழுப்புரம்: தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் ஒரு குடும்ப அட்டைதாரருக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதற்கு 2 முதல் 3 நிமிஷங்களே ஆகின்றன என்று கூட்டுறவுத்துறை விளக்கம்அளித்துள்ளது. இதுகுறித்து கூட்... மேலும் பார்க்க

விழுப்புரம் முத்து மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டிச்சாலை பீமநாயக்கன்தோப்பு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்ற... மேலும் பார்க்க

கருப்புப்பட்டை அணிந்து பணியாற்றிய உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள்

விழுப்புரம்: 15 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ளாட்சி நிதித் தணிக்கையாளா்கள் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா். முன்... மேலும் பார்க்க

காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புதுச்சேரி, ராஜாஜி தெரு... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்... மேலும் பார்க்க