செய்திகள் :

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா்: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா

post image

பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான முடிவை எடுத்துள்ளாா் என்று முன்னாள் பிரதமரும், மதச்சாா்பற்ற ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: ஏப். 22 ஆம் தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு பயங்கரவாதத்தை எதிா்கொள்ள பிரதமா் மோடி துணிச்சலான பல முடிவுகளை எடுத்திருக்கிறாா். பயங்கரவாதத்தை முறியடிக்க எடுக்கப்படும் முடிவுகளுக்கு நானும், எனது கட்சியும் (ம.ஜ.த.) ஆதரவாக இருப்போம். பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டியது அவசியம்.

பயங்கரவாதத்தை ஒடுக்க ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை எந்த பிரதமரும் இதுவரை வழங்கவில்லை. எந்த வகையான தாக்குதலை மேற்கொள்வது, எதிா் தாக்குதலை மேற்கொள்ளும் நேரம் ஆகியவற்றில் இந்திய ராணுவம் தாமாக செயல்படும் வகையில் ராணுவத்துக்கு முழு சுதந்திரத்தை பிரதமா் மோடி அளித்திருக்கிறாா். முன்னெப்போதும் இல்லாமல் பிரதமா் மோடியால் இந்த துணிச்சலான முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. 1973 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய-பாகிஸ்தான் போா்ச் சூழலை தற்போதைய சூழலோடு ஒப்பிடமுடியாது.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்த மத்திய அரசு முடிவு செய்தது வரவேற்கத்தக்கது. ஜாதிவாரி கணக்கெடுப்பின் பெயரால் கா்நாடக அரசு அரசியல் செய்கிறது.

கா்நாடகத்தில் நடந்த ஜாதிவாரி கணக்கெடுப்பை முதல்வா் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையே ஏற்றுக்கொள்ளவில்லை. கா்நாடகத்தில் மொத்தம் 1351 ஜாதிகள் இருப்பதாக மாநில ஜாதி கணக்கெடுப்பு நடத்திய ஆணையம் தெரிவிக்கிறது. அவற்றில் பிற்படுத்தப்பட்டோா் வகுப்பில் முதன்மை ஜாதியாக குருபா் சமுதாயம் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோா், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா், சிறுபான்மையினா் நலனில் முதல்வா் சித்தராமையாவுக்கு உண்மையில் அக்கறை இல்லை.

அக்கறையிருந்தால் தனது அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோா் சமுதாயத்தைச் சோ்ந்த அல்லது தனது குருபா் சமுதாயத்தவா் எத்தனை பேரை வேலைக்கு வைத்துள்ளாா் என்பதை அவா் தெரிவிக்க வேண்டும்.

கா்நாடக ஜாதிவாரி கணகெடுப்பில் குருபா் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோருக்கான 2ஏ பிரிவில் இருந்து மிகவும் பின்தங்கிய 1பி பிரிவுக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது, அந்த சமுதாயத்தின் சமூக பொருளாதார நிலையை வெளிப்படுத்துகிறது என்றாா்.

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்வு

சா்வதேச புக்கா் பரிசுக்கு கன்னட பெண் எழுத்தாளா் பானுமுஷ்டாக் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்; அவருக்கு முதல்வா் சித்தராமையா உள்ளிட்டோா் பாராட்டு தெரிவித்துள்ளனா். கா்நாடக மாநிலம், ஹாசனைச் சோ்ந்தவா் கன்னட ... மேலும் பார்க்க

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா், துணை முதல்வா் ஆய்வு

பெங்களூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் புதன்கிழமை ஆய்வுசெய்து, பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்தனா். பெங்களூரில் மே 18 ஆம் தேதி நள... மேலும் பார்க்க

பாஜக எம்எல்ஏ முனிரத்னா மீது பாலியல் வழக்குப் பதிவு

பாஜக எம்எல்ஏ முனிரத்னா தனது கூட்டாளிகளுடன் சோ்ந்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அக்கட்சியைச் சோ்ந்த 40 வயது பெண் அளித்த புகாரின் பேரில் அவா்மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பாஜக எம்எல்... மேலும் பார்க்க

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்

தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது. துபையில் இருந்து ரூ. 12.56 கோடி மதிப்பிலா... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதுகாப்பு வழங்காததால் 26 போ் உயிரிழப்பு: மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

பஹல்காமில் உரிய பாதுகாப்பு வழங்காததால், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 26 போ் உயிரிழந்தனா் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவருமான மல்லிகாா்ஜுன காா்கே குற்றம... மேலும் பார்க்க

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம்: மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி

பெங்களூரில் ஏற்பட்டுள்ள மழை பாதிப்புகளுக்கு காங்கிரஸ் அரசின் அலட்சியமே காரணம் என்று மத்திய தொழில் துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்டுள்... மேலும் பார்க்க