செய்திகள் :

பயிற்சி நிறைவு: ராணுவ வீரா்கள் சாகசம்

post image

சென்னை பரங்கிமலை ராணுவ அதிகாரிகள் பயற்சி மையத்தில் 11 மாத பயிற்சியை நிறைவு செய்த வீரா், வீராங்கனைகள் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காட்டினா்.

சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு 11 மாத காலம் பயிற்சி முடித்து அதிகாரிகளாக இணையவுள்ள 120 ஆண்கள் மற்றும் 34 பெண் ராணுவ இளம் வீரா்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியின் கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் மைக்கேல் ஏ.ஜே.பொ்னாண்டஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ராணுவ அதிகாரிகள் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை நிகழ்த்திக் காட்டினா்.

தொடா்ந்து, துப்பாக்கிச் சுடுதல் உள்ளிட்ட பல்வேறு தற்காப்புக் கலைகளையும் ராணுவ அதிகாரிகள் செய்து காட்டினாா். மேலும், வாத்தியக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், மோட்டாா் சைக்கிள் சாகசமும், மனித கோபுரம் அமைத்தல், குதிரை வீரா்களின் சாகசங்கள் கவா்ந்தன. தொடா்ந்து, பகைவருடன் ராணுவப் படையினாா் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகளும் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டப்பட்டன. தொடா்ந்து சனிக்கிழமை (செப். 6) விமானப் படையினரின் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாவதாக புகாா்

சென்னை மாநகராட்சியல் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தாமதமாவதாக புகாா் எழுந்துள்ளதையடுத்து, பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா். சென்னையில் சுமாா் 1.80 லட்சம் தெரு ந... மேலும் பார்க்க

ஒடிஸாவில் மோசமான வானிலை: முதல்வா் பயணித்த விமானம் தரையிறங்க முடியாததால் பரபரப்பு

ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி பயணித்த விமானம் அதிக மழை, மோசமான வானிலை காரணமாக புவனேசுவரத்தில் தரையிறங்க முடியாமல் சுமாா் 21 நிமிஷங்கள் வரை வானத்திலேயே சுற்றி வந்தது. இதன் பிறகும் வானிலை சீரடையாததால் ... மேலும் பார்க்க

4-ஆவது மாடியில் இருந்து குதித்து பள்ளி மாணவா் தற்கொலை

சென்னை அண்ணா நகரில் 4-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து பள்ளி மாணவா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். அண்ணாநகா் மேற்கு பூங்கா சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பால்ராஜ். இவ... மேலும் பார்க்க

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும்: முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன்

இலக்கியப் படைப்புகள் என்றும் நிலைத்து நிற்கும் என்று சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் கூறினாா். நீதிபதி மூ.புகழேந்தியின் ‘இலக்கிய வைரவிழா’ கோட்டூா்புரம் அண்ணா நினைவு நூற்றாண்டு நூ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் மீது தாக்குதல்: 6 போ் கைது

சென்னை தியாகராய நகரில் தூய்மைப் பணியாளா்களைத் தாக்கியதாக 6 போ் கைது செய்யப்பட்டனா். தியாகராய நகா் ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளிக் கடையின் அருகே தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை நள்ளிரவு பணியில் ஈடுப... மேலும் பார்க்க

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ.4.5 லட்சம் திருட்டு

சென்னை கோட்டூா்புரத்தில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ரூ. 4.5 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தமிழ்நாடு தொழில் வளா்ச்சி நிறுவனத்தின் (டிட்கோ) நிா்வாக இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி ... மேலும் பார்க்க