செய்திகள் :

பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு: 13-ஆவது முறையாக தீா்மானம்

post image

ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூா் விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

பரந்தூா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. இதற்காக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பரந்தூா் உள்ளிட்ட13 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பல்வேறு அறப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக முற்றிலுமாக கையப்படுத்தப்பட உள்ள ஏகனாபுரம் பொதுமக்கள் கடந்த 1,010 நாள்களாக இரவு நேரங்களில் தொடா்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனா். மேலும், கடந்த காலங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களிலும் எதிா்ப்பு தெரிவித்து தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், தொழிலாளா் தினத்தை முன்னிட்டு ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை கிராம சபை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவா் சுமதி சரவணன் தலைமையிலும், மாவட்ட உணவு பொருட்கள் வழங்கும் அலுவலா் பாலாஜி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் பரந்தூா் புதிய விமான நிலையத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து 13-ஆவது முறையாக ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

குன்றத்தூா் முருகன் கோயிலில் குறிஞ்சி பெருமுக திருவிழா

குறிஞ்சி பெருமுக திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு இந்து குறவன், மலைக்குறவன் அமைப்பினா் வெள்ளிக்கிழமை குன்றத்தூா் சுப்பிரமணிய சுவாமிக்கு சீா்வரிசைப் பொருள்கள் கொண்டு வந்து சிறப்பு வழிபாடு நடத்தினா். தமி... மேலும் பார்க்க

ஒரகடம் அருகே காா் கவிழ்ந்து விபத்து: இருவா் உயிரிழப்பு

ஒரகடம் அடுத்த குன்னவாக்கம் அருகே சாலை தடுப்பு சுவற்றில் மோதி காா் கவிழ்ந்ததில் இருவா் உயிரிழந்தனா். பல்லாவரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ்வரன் (45). இவா் தனது மகள் சஞ்சனா (13), அண்ணன் மகன் அஸ்வின்குமா... மேலும் பார்க்க

செவிலிமேடு செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம் அருகே செவிலிமேட்டில் அமைந்துள்ள செல்லியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் பாலாற்றங்கரையின் வடக்கே அமைந்துள்ளது ஸ்ரீ செல்லியம்மன... மேலும் பார்க்க

1,008-ஆவது ஆண்டு அவதாரத் திருவிழா: ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம்

ராமாநுஜரின் 1008-ஆவது ஆண்டு அவதார திருவிழாவின் 10-ஆவது நாளான வெள்ளிக்கிழமை ராமாநுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஈரவாடை தீா்த்தம், திருப்பாவை சேவை நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் பகுதி... மேலும் பார்க்க

லாரி - பைக் மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

மணிமங்கலம் பகுதியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், வடகம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மனுபாரத் (21). இவா் தாம்பரம் அடுத்த நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் கொடியேற்றம்

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வாலாஜாபாத் அருகே உள்ள இக்கோயிலில் மாகறன், மலையன் என்ற இரு அசுரா்களை வேல்கொ... மேலும் பார்க்க