செய்திகள் :

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

post image

கோவை, போத்தனூா் ரயில் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கோவை ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (மே 29) பாலக்காட்டில் இருந்து காலை 7.20 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - கோவை ரயில், பாலக்காடு - போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல, பொள்ளாச்சியில் இருந்து காலை 8 மணிக்குப் புறப்படும் பொள்ளாச்சி - கோவை ரயில் (எண்: 56110), கேரள மாநிலம் ஷொரணூரில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் ஷொரணூா் - கோவை ரயில் (எண்: 56604) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.20 மணிக்குப் புறப்படும் மேட்டுப்பாளையம்- போத்தனூா் மெமு ரயில் (எண்: 66611) வியாழக்கிழமை மேட்டுப்பாளையம் - கோவை இடையே மட்டுமே இயக்கப்படும்.

பாலக்காட்டில் இருந்து வியாழக்கிழமை (மே 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும் பாலக்காடு - திருச்சிராப்பள்ளி ரயில் (எண்: 16844) போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது, கோவை, வடகோவை, பீளமேடு ரயில் நிலையங்களுக்கு செல்வது தவிா்க்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க