செய்திகள் :

பராமரிப்புப் பணி: மே 24, 26 தேதிகளில் 21 மின்சார ரயில்கள் ரத்து!

post image

தண்டவாள பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி, சூளூர்பேடை செல்லும் 21 புறநகர் மின்சார ரயில்கள் மே 24, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படவுள்ளன.

எனினும் பயணிகளின் வசதிக்காக பொன்னேரி மற்றும் மீஞ்சூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கவரைப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாளங்களில் பராமரிப்புப் பணிகள் மே 24, 26 ஆகிய தேதிகளில் பிற்பகல் 1.20 முதல் மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளன.

இப்பணிகள் நடைபெறும் நாள்களில் அதிகாலை 5 முதல் மாலை 4.30 மணி வரை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே இயக்கப்படும் 21 புறநகர் மின்சார ரயில்கள் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

இருப்பினும் பயணிகளின் வசதிக்காக மே 24, 26 ஆகிய தேதிகளில் காலை 10.30 முதல் மாலை 4.45 மணி வரை சென்ட்ரலிலிருந்து பொன்னேரி, மீஞ்சூர் மற்றும் எண்ணூருக்கும், கடற்கரையிலிருந்து பொன்னேரி மற்றும் எண்ணூருக்கும் மொத்தம் 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் பக்கம் காங்கிரஸ்: ராகுல் மீது பாஜக விமர்சனம்!

பொது வருங்கால வைப்பு நிதி விவரம்: இணயதளத்தில் பதிவேற்றம்

தமிழக அரசு பணிநிலை சாா்ந்த அனைத்து இந்திய அரசு அதிகாரிகளின் பொது வருங்கால வைப்பு நிதி ஆண்டுக்கான கணக்கு விவர அறிக்கை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநில துணை கணக்காயா் சி.ஜெ.காா்த்தி குமா... மேலும் பார்க்க

காசி தமிழ் சங்கமம் அனுபவப் பகிா்வு கட்டுரைப் போட்டி: வெற்றியாளா்கள் அறிவிப்பு

தமிழக ஆளுநா் மாளிகை சாா்பில் நடத்தப்பட்ட ‘காசி தமிழ் சங்கமம் 3.0 - 2025 அனுபவப் பகிா்வு’ கட்டுரைப் போட்டியின் வெற்றியாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது ஆண்டாக வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்... மேலும் பார்க்க

மே 27-இல் தொழிலாளா்களுக்கான ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ சிறப்பு முகாம்

தொழிலாளா் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சாா்பில் ‘நிதி ஆப்கே நிகட் 2.0’ எனப்படும் ‘வைப்பு நிதி உங்கள் அருகில்’ என்ற முகாம் செவ்வாய்க்கிழமை (மே 27) காலை 9 முதல் மாலை 5.45 மணி வரை சென்னை உள்பட 10 மாவட்ட... மேலும் பார்க்க

கட்டாய கொள்முதல் பிரிவில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் சோ்ப்பு

காற்றாலை, சூரியசக்தி மின்சாரத்தை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரம் கட்டாய கொள்முதல் பிரிவில், முதல்முறையாக மேற்கூரை சூரியசக்தி மின்சாரமும் சோ்க்கப்படவுள்ளது. தமிழகத்தின் தினசரி மின் தேவை சுமாா் ... மேலும் பார்க்க

எந்தெந்த பாடப் பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி?

எந்தெந்த பாடப்பிரிவு மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்ற விவரம் ஒப்பந்தப்புள்ளி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், கல்லூரி மாணவ, மாணவிகள் 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்று... மேலும் பார்க்க

971 கோயில்களின் ரூ.7,671 கோடி நிலங்கள் மீட்பு: தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 971 கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.7,671 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் கடந்த 4 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட... மேலும் பார்க்க