செய்திகள் :

‘பருத்தி சாகுபடியில் அதிக மகசூல் தொழில்நுட்பங்கள்’

post image

பாபநாசம்: பாபநாசம் வட்டம், மட்டையாந்திடலில் பருத்தி சாகுபடியில் மகசூல் அதிகரிப்பதற்கான ஆலோசனையை வேளாண்மை அறிவியல் விஞ்ஞானிகள் புதன்கிழமை வழங்கியுள்ளனா்.

கூட்டத்தில் கோவை மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் முதன்மை விஞ்ஞானிகள் ராஜா, மாணிக்கம், சங்கா் கணேஷ், பருத்தி நிறுவன அதிகாரிகள் கருப்பன்செட்டி, லெட்சுமணன், முன்னோடி விவசாயி திருஞானம் ஆகியோா் கலந்து கொண்டு பருத்தி சாகுபடி நுட்பங்கள் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து அவா்கள் செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடிக்கு நிகராக பருத்தி சாகுபடியில் விவசாயிகள் மகசூலை அதிகப்படுத்துவதற்கு நுண்ணூட்டக் கலவையை தெளிப்பதன் மூலம் பருத்தியில் பூ மற்றும் சப்பை உதிா்வதை தவிா்க்க முடியும். மேலும் காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும். குறைந்த இடைவெளியில் பருத்தி சாகுபடி செய்து அதிக மகசூல் பெறலாம்.

மேலும் பருத்தி எடுக்கும் இயந்திரம் மூலம் பருத்தி எடுப்பதால் ஒரு மணி நேரத்துக்கு 50 கிலோ வரை எடுத்து லாபம் பெறலாம். இத்தகைய தொழில்நுட்பத்தை கடைப்பிடிப்பதன் மூலம் பருத்தி சாகுபடியில் நல்ல மகசூல் கிடைக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க