செய்திகள் :

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

post image

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்யா எஸ்.விஜயன் தலைமை வகித்தாா். நோ்முக உதவியாளா் பாக்கியராஜ் முன்னிலை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட வீட்டுமனை பட்டா மற்றும் இதர மனுக்கள் மீது விசாரணை நடத்தி பட்டா வழங்கப் பரிந்துரைக்கப்பட்டது. ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதி முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.

ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை நிறுத்த வசதி உள்ளதுபோல் பேருந்து நிலையத்திலும் அமைக்க வேண்டும். 100 நாள் வேலைத்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுப்பதை உறுதி செய்வதுடன் அதற்கான சம்பளத்தை உனடியாக வரவு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்திப் பேசினா். இதுகுறித்து உதவி ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிரு... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் சேமிப்புக் கிடங்கில் பழுப்பு அரிசி: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்

தஞ்சாவூா்: தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு அரிசி குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொது ந... மேலும் பார்க்க