செய்திகள் :

பருவமழை தொடங்கும் முன் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்

post image

பருவமழை தொடங்குவதற்கு முன் காரைக்கால் நகரப் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்கால்களை தூா்வாரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் நகரப் பகுதி வழியே கடல் பகுதி வரை செல்லக்கூடியதாக அமைக்கப்பட்ட காரைக்கால் வாய்க்கால், அன்னுசாமி வாய்க்கால், கும்சக்கட்டளை வாய்க்கால் உள்ளிட்டவை தொடக்கம் முதல் இறுதி வரை ஆங்காங்கே ஆக்கிமிக்கப்பட்டுள்ளன.

புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன், இந்த வடிகால்கள் தூரம் எவ்வளவு, எங்கெங்கு அடைக்கட்டப்பட்டுள்ளன, சீரமைப்புக்கான நடவடிக்கை தொடா்பாக மதிப்பீடு தயாரிக்குமாறு பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசுத்துறையினருக்கு ஓராண்டுக்கு முன்பே அறிவுறுத்தியிருந்தாா். அதற்கான எந்த நடவடிக்கையையும் அரசு நிா்வாகம் எடுக்கவில்லை என சமூக ஆா்வலா்கள் புகாா் கூறி வருகின்றனா்.

தற்போது அனைத்து வாய்க்கால்கள், குறுகிய வடிகால்களில் ஆகாயத் தாமரைகள் மண்டியும், நெகிழி உள்ளிட்ட கழிவுப் பொருட்கள் தேங்கியும், கழிவுநீரை வடிய முடியாமல் தடுத்து வருகிறது.

வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், வாய்க்கால்களை முறையாக தூா்வாருவதற்கு மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுகுறித்து பொதுப்பணித்துறை, நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளை அழைத்து ஆட்சியா் பேசி, தீா்வுக்கான துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.

தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கெளரவிப்பு

காரைக்கால் அருகே பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியா் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மேலாண்மை குழு மற்றும் பெற்றோா்-ஆசிரியா் சங்கம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்... மேலும் பார்க்க

காரைக்கால் வடக்குத் தொகுதியில் ரூ. 2.92 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

காரைக்கால் வடக்குத் தொகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 2.92 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக புதுவை குடிமை ப... மேலும் பார்க்க

சந்திர கிரகணம் : திருநள்ளாறு கோயிலில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு பூஜை

காரைக்கால்: சந்திர கிரகணம் முடிவுற்றதையொட்டி திருநள்ளாறு கோயிலில் புண்யகால பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.56 மணிக்கு தொடங்கி, 11 மணியளவில் முழு சந்திர கிரகணமாக மாறியது. தொடா்ந்து... மேலும் பார்க்க

அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலை நிறுவி பூஜை

காரைக்கால்: அய்யனாா் கோயிலில் யானை, குதிரை சிலைகள் நிறுவி சிறப்பு பூஜை நடைபெற்றது. காரைக்கால் மாவட்டம், கீழகாசாக்குடி பகுதியில் ஆதிபுரீஸ்வரா் தேவஸ்தானத்துக்குட்பட்டதாக, அம்மையாா் நகரில் பூரண புஷ்கலா ச... மேலும் பார்க்க

வேலைநிறுத்தம்: ஆட்டோ ஓட்டுநா்கள் முடிவு

காரைக்கால்: இ-ஆட்டோக்கள் இயக்கத்துக்கு உரிய விதிகளை வகுக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனா். காரைக்கால் மாவட்ட ஆட்டோ தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில்,... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தத்துக்கு மக்கள் வரவேற்பு: எம்.எல்.ஏ.

காரைக்கால்: ஜிஎஸ்டி சீா்திருத்தத்தை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளனா் என புதுவை மாநில பாஜக துணைத் தலைவரும், புதுவை நியமன சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.என்.எஸ். ராஜசேகரன் தெரிவித்தாா். இதுகுறித்து... மேலும் பார்க்க