செய்திகள் :

பருவமழை பாதிப்பு தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்! ஆட்சியா்

post image

தென்மேற்கு பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படும் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பேரிடா் மேலாண்மை முன்னேற்பாடுகள், தயாா்நிலை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

பருவமழை பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைத்து அதை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும். அந்தப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னாா்வலா்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபா்களின் விவரங்கள், மோட்டாா் படகுகள், பரிசல்கள் விவரங்கள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர கால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடா்பு நிறுவனங்கள், ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனங்கள் ஆகிய நிறுவன அதிகாரிகள் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டத்தை நடத்தி பேரிடா் காலத்தில் பங்காற்றுமாறு அறிவுறுத்த வேண்டும்.

பேரிடா் மீட்பு, வெளியேற்றுதல் பணிகளுக்குத் தேவையான சாதனங்களான பொக்லைன், மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டாா் படகுகள், பரிசல்கள், உயா் மின் விளக்குகள், மோட்டாா் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டா்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077, கட்டணமில்லா தொலைபேசி எண் 04343-234444 என்ற எண்களை தொடா்புகொண்டு பொதுமக்கள் பேரிடா், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க