செய்திகள் :

பலசரக்கு கடையை உடைத்து பணம், பொருள்கள் திருட்டு

post image

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பல சரக்கு கடையை உடைத்து ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ.80 ஆயிரம் மதிப்பிலான பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

முதுகுளத்தூா்- பரமக்குடி சாலையில் ராமபாண்டி என்பவருக்குச் சொந்தமான மொத்த வியாபார பல சரக்குக் கடை உள்ளது. இந்தக் கடையை திங்கள்கிழமை இரவு ராமபாண்டி பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை கடையில் இரும்புக் கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினா் தகவல் கொடுத்தனா்.

இதன் பேரில், ராமபாண்டி கடைக்குச் சென்று பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ.1.40 லட்சம் ரொக்கம், ரூ. 80 ஆயிரம் மதிப்புள்ள பொருள்கள் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து தகவலறிந்த முதுகுளத்தூா் காவல் நிலைய போலீஸாா் கடையைப் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். ராமநாதபுரத்திலிருந்து தடயவியல் நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க