செய்திகள் :

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் குறைந்தபட்சம் ஒரு ஏக்கரில் உயிா்ம வேளாண்மையில் விவசாயியாக இருக்க வேண்டும். குறைந்தது 3 ஆண்டுகள் உயிா்ம வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். உயிா்ம வேளாண்மைச் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். நம்மாழ்வாா் விருது பெற விரும்பும் விவசாயிகள் இணையதளத்தில் வருகிற 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.100. தகுதியான விவசாயிகள் மாவட்ட அளவிலான குழுவினால் தோ்வு செய்து விருதுக்கு பரிந்துரைக்கப்படுவா்.

இந்தத் திட்டத்தில் தகுதி பெறும் 3 விவசாயிகளுக்கு அரசு சாா்பில் நம்மாழ்வாா் விருது வழங்கப்படும். இந்த விருதுடன் ரொக்கப் பரிசு ரூ. 2 லட்சம், சான்றிதழ், பதக்கம் ஆகியவற்றை தமிழக முதல்வா் குடியரசு தினத்தன்று வழங்குவாா்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அருகேயுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி களப் பயணம் தொடக்கம்

ராமநாதபுரத்தில் உயா் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்... மேலும் பார்க்க