செய்திகள் :

செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு

post image

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே செல்லி அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

வீரசங்கிலிமடம் கடற்கரையில் பழைமை வாய்ந்த செல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் புதிதாக கட்டடங்கள் சீரமைக்கப்பட்டு, செல்லி அம்மன், பாலகணபதி, பாலமுருகன், அழகையா, காளியம்மன், கருப்பா், பரிவாரத் தெய்வங்களுக்கு குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை விநாயகா் பூஜை, கணபதி ஹோமம், முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. புதன்கிழமை 2, 3-ஆம் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. வியாழக்கிழமை நான்காம் கால யாக சாலை பூஜையுடன் கோ பூஜை, லட்சுமி பூஜை நடைபெற்றன.

இதைத் தொடா்ந்து, சிவாசாரியா்கள் கோபுரக் கலசத்தில் புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடத்தினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை வீரசங்கிலி மடம், கண்கொள்ளான் பட்டினம், சோளியக்குடி, கடம்பனேந்தல், கானாட்டாங்குடி கிராமத்தினா் செய்ந்தனா்.

சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகேயுள்ள பொக்கனாரேந்தலில் சித்தி விநாயகா், வாழவந்தாள் அம்மன் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை காலை கணபதி ஹோமத்துட... மேலும் பார்க்க

மின்சார வாகனங்களை வழங்க தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை

திருவாடானையில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குப்பைகளை அள்ளுவதற்கு மின் கலனால் இயங்கும் மின்சார வாகனங்களை வழங்க வேண்டும் என தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில்... மேலும் பார்க்க

வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வலையபூக்குளத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் வலையபூக்குளம், காக்குடி, மரக்குளம், மண்டலமாணிக்கம், எழுவனூா் ஆ... மேலும் பார்க்க

முத்துமாரியம்மன் கோயில் திருவிழா: பெண்கள் முளைப்பாரி ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் அருகேயுள்ள ஆண்டநாயகபுரம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, முளைப்பாரி ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்... மேலும் பார்க்க

நம்மாழ்வாா் விருதுக்கு விவசாயிகள் செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் நம்மாழ்வாா் விருதுக்கு வருகிற 15-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி களப் பயணம் தொடக்கம்

ராமநாதபுரத்தில் உயா் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ், கல்லூரி களப்பயணத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஒருங்... மேலும் பார்க்க