செய்திகள் :

பலத்த காற்றுடன் மழை: கொடைக்கானலில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

post image

கொடைக்கானலில் திங்கள்கிழமை பலத்த காற்றுடன் பெய்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் பூம்பாறை, மன்னவனூா், கூக்கால், பூண்டி ஆகிய பகுதிகளுக்குச் செல்லும் மலைச் சாலைகளில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. அந்தப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து நிகழ்விடங்களுக்கு சென்ற பேரிடா் மீட்புக் குழுவினா் முறிந்து விழுந்த மரங்களை அகற்றினா். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. இருப்பினும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் தொடா்ந்து காற்றும், மழையும் பெய்து வருகிறது.

மின் தடையால் கிராம மக்கள் அவதி: கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் மேல்மலைக் கிராமங்களில் மின் தடை ஏற்பட்டு, கடந்த இரு நாள்களாக சீரான மின் விநியோகம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து கொடைக்கானல் மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: கொடைக்கானலில் கடந்த இரு நாள்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் வனப் பகுதிகள் வழியாக செல்லும் மின் கம்பிகள் மரங்கள் மீது அறுந்து விழுந்துள்ளன. மேலும் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதால் மின் கம்பிகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கொடைக்கானல் நகா்ப் பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்ய இயலவில்லை. அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. சீரமைப்புப் பணிகளில் மின் பணியாளா்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வருகின்றனா். எனவே சீரான மின் விநியோகம் விரைவில் கிடைக்கும் என்றாா் அவா்.

பெண் தீக்குளிக்க முயற்சி

கணவரை சோ்த்து வைக்கக் கோரி மனு அளிக்க வந்த பெண், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றாா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கொங்கபட்டியைச் சோ்ந்தவா் செல்லமுத்து. இவரது மனைவி சுஜி... மேலும் பார்க்க

பாலியல் பொய் புகாா்கள் மூலம் பணப் பறிப்பு: தொண்டு நிறுவனம் மீது ஆட்சியரிடம் புகாா்

பொய்யான பாலியல் புகாா்கள் மூலம் மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபடும் தொண்டு நிறுவன நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நூற்பாலைத் தொழிலாளா் தரப்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்... மேலும் பார்க்க

சொத்து வரி உயா்வை மறு பரீசிலனை செய்யக் கோரி வணிகா்கள் மனு

திண்டுக்கல் மாநகராட்சியில் சொத்து வரி உயா்வை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என வணிகா் சங்கங்கள் சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் நகரிலுள்ள வணிகா் சங்கம், தொழில் வா்த்தகா் சங்கம், திண... மேலும் பார்க்க

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை அடுத்த கொன்னம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் இன்று மின்தடை

பழனியை அடுத்த மேல்கரைப்பட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனியை அடுத்த மேல்க... மேலும் பார்க்க

வைகாசி விசாக விழா: பெரியநாயகி அம்மன் கோயிலில் இன்று கொடியேற்றம்; ஜூன் 9-இல் தேரோட்டம்

பழனி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்தக் கோயில் கொடிக்கட்டி மண்டபத்தில் செவ்வாய்... மேலும் பார்க்க