செய்திகள் :

பலத்த காற்று: பழனியில் ரோப் காா் நிறுத்தம்

post image

பலத்த காற்று காரணமாக, பழனியில் செவ்வாய்க்கிழமை ரோப் காா் இயக்கம் சுமாா் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அடிவாரத்திலிருந்து மலை உச்சியை சென்றடைய ரோப் காா், வின்ச் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ரோப் காா் மழைக்காலத்தில்கூட நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டாலும், காற்று வீசும் காலத்தில் இயக்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.

இந்தப் பகுதியில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் காற்று வீசும் போது, தானாகவே ரோப் காா் நிற்கும் வகையில் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால், பலத்த காற்று வீசும் போது ரோப் காா் இயக்கப்படாது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதால், ரோப் காா் இயக்கம் சுமாா் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பக்தா்களுக்கு முறையாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, படிப்பாதை அல்லது வின்ச்சை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால், ரோப் காரில் பயணிக்க வந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் நிலவி வரும் குடிநீா்த் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் பருவ மழை பெய்வது வழக்கம். ஆனால் ப... மேலும் பார்க்க

குடிநீா்க் குழாயில் உடைப்பு: சாலையில் ஆறாக ஓடிய தண்ணீா்

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கூட்டுக் குடிநீா் குழாயில் புதன்கிழமை உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் தண்ணீா் ஆறாக ஓடியது. சின்னாளபட்டிக்கு கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் குழாய் பதிக்க... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் ரயில் மறியல்: எம்பி உள்பட 1,522 போ் கைது

அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை உறுப்பினா் உள்பட 1,522 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆத... மேலும் பார்க்க

நிலக்கோட்டை அருகே முளைப்பாரி ஊா்வலம்

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள குளத்துபட்டி குழந்தை காளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. இந்தக் கோயில் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கியத... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் திடீா் புகை: 30 நிமிஷங்கள் தாமதம்

திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு புதன்கிழமை சென்ற வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வெளியேறியது. இதையடுத்து, திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே சுமாா் 30 நிமிஷங்கள் ரயில் நிறுத்தப்பட்டது. திருநெல்வேல... மேலும் பார்க்க

தோட்டக் கலை விவசாயிகள் நுண்ணீா் பாசனம் அமைக்க மானியம்

மானியத்துடன் நுண்ணீா் பாசன வசதி அமைக்க குஜிலியம்பாறை தோட்டக் கலை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக குஜிலியம்பாறை வட்டார தோட்டக் கலை உதவி இயக்குநா் பா. முத்தரசு தெரிவித்தத... மேலும் பார்க்க