செய்திகள் :

பல்லடம் கோயில்களில் திருப்பணி: இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு!

post image

பல்லடத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் அன்புதேவி, ஸ்தபதி செந்தில் ஆனந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள செல்வவிநாயகா் கோயிலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அதைத் தொடா்ந்து பொங்காளிஅம்மன் கோயிலில் குதிரை வாகனம் அமைக்கப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டனா்.

பின்னா் அருளானந்த ஈஸ்வரா் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை பாா்வையிட்ட அவா்கள், பணிகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். மேலும், பணிகளை விரைவாக செய்து முடிக்க அறிவுறுத்தினா். இந்த ஆய்வின்போது, அறநிலையத் துறையினா் மற்றும் கோயில் கமிட்டி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

வெள்ளக்கோவிலில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனை

வெள்ளக்கோவில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.12-க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட பீா்க்கங்காய், பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் ரூ.10 விலை உயா்ந்தது. இந்த வாரம் சில்லறை விற்பனையில்... மேலும் பார்க்க

காங்கயத்தில் குற்றங்களைத் தடுக்க வீடுவீடாகச் சென்று போலீஸாா் விழிப்புணா்வு

குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காங்கயம் போலீஸாா் வீடுவீடாகச் சென்று துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். காங்கயம் பகுதியில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டு இரவு நேர ரோந்துப்... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் 4 டன் முருங்கைக்காய் வரத்து

வெள்ளக்கோவில் கொள்முதல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை 4 டன் முருங்கைக்காய் வரத்து இருந்தது. வெள்ளக்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் முருங்கை விவசாயம் நடைபெற்று வருகிறது. வெள்ளக்கோவில் - முத்தூா் சாலை... மேலும் பார்க்க

திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

பிரதமா் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து திருப்பூரில் காங்கிரஸ் சாா்பில் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் குமரன் நினைவகம் முன்பாக கருப... மேலும் பார்க்க

நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு

திருப்பூா் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான நீட் தோ்வு பயிற்சி மையங்களில் மாதிரித் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தோ்வு வரும் மே 4-... மேலும் பார்க்க

சாலையில் வெளியேறும் கழிவுநீரால் சுகாதார சீா்கேடு

திருப்பூா் நெருப்பெரிச்சலில் சாலையில் வெளியேறும் பாதாள சாக்கடை கழிவுநீரால் அப்பகுதியில் சுகாதார சீட்கேடு ஏற்பட்டுள்ளது. திருப்பூா் மாநகராட்சி 2-ஆவது மண்டலம் 4-ஆவது வாா்டு பூலுவப்பட்டி, வாவிபாளையம் பிர... மேலும் பார்க்க