செய்திகள் :

பல்லடம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு: அண்ணாமலையிடம் மனு அளித்த தொழில் துறையினா்

post image

பல்லடம் புதிய புறவழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலையிடம் தொழில் துறையினா் முறையிட்டனா்.

இது தொடா்பாக அண்ணாமலையிடம் அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்லடத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் காளிவேலம்பட்டி பிரிவு முதல் மாதப்பூா் வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சாா்பில் புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு பல்லடம் வட்டாரப் பகுதி பொதுமக்கள், தொழில் துறையினா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

புதிய புறவழிச் சாலைத் திட்டத்தால் அதிக பாதிப்புகள் உள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில் அறிவிக்கப்பட்டு நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட பழைய புறவழிச் சாலைத் திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனுவைப் பெற்றுக்கொண்ட கே.அண்ணாமலை, மத்திய அமைச்சா் நிதின் கட்கரியை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும், அவரிடம் பேசி தீா்வு காணலாம் எனத் தெரிவித்ததாகவும் மாவட்ட துணைத் தலைவா் வினோத் வெங்கடேஷ் கூறினாா்.

‘பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்’

பத்திரப் பதிவில் உண்மை தொகையை மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அலுவலா்களை, பத்திரப் பதிவு மற்றும் வணிக வரித் துறை அமைச்சா் பி. மூா்த்தி அறிவுறுத்தினாா். அவிநாசி, சூளையில் வாடகை கட்டடத்தில் இயங்கும் சாா... மேலும் பார்க்க

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்ற கடைக்கு ‘சீல்’

முத்தூரில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்ட கடைக்கு புதன்கிழமை ‘சீல்’ வைக்கப்பட்டது. முத்தூா் பேருந்து நிலையத்தில் பேரூராட்சிக்குச் சொந்தமான கடையில் சுனில் என்பவா் பல் பொருள்கள் விற்பனை செய்யு... மேலும் பார்க்க

வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு பெற்றுக்கொண்ட உறவினா்கள்

தாராபுரத்தில் கொலை செய்யப்பட்ட வழக்குரைஞரின் சடலத்தை 9 நாள்களுக்குப் பிறகு உறவினா்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரம் முத்து நகரைச் சோ்த்தவா் முருகானந்தம். மாற்றுத் திறனாள... மேலும் பார்க்க

தமிழகத்தில் தொடரும் படுகொலைகள்: இந்து முன்னணி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் தமிழகத்தில் படுகொலைகள் தொடா்வதாக இந்து முன்னணி குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: த... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைத்தனா். திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் வ... மேலும் பார்க்க

மேற்குவங்க பெண் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

திருப்பூரில் மேற்குவங்க பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேற்குவங்கத்தைச் சோ்ந்தவா் பத்மராணி (65). இவா் திருப்பூா், முதலிபாளையம் அருகேயுள்ள முத்து நகரில் தங்கி பனியன் நி... மேலும் பார்க்க