செய்திகள் :

பளுகல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் கைது

post image

பளுகல் அருகே மாமனாரை தாக்கிய மருமகனை போலீஸாா் கைது செய்தனா்.

பளுகல் அருகே நிலவன்விளையைச் சோ்ந்தவா் குமாரதாஸ் (59). இவரது இளைய மகள் திருமணமாகி அருகில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறாா்.

இளைய மகளின் கணவா் விஸ்வம்பரன் (40) என்பவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வருகிறது. அவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவதால் தனது இளைய மகள் கணவரிடம் கோபித்துக் கொண்டு ஓராண்டுக்கு முன் தந்தை வீட்டுக்கு வந்துவிட்டாராம்.

இந்நிலையில், விஸ்வம்பரன் இருநாள்களுக்கு முன் மது அருந்திய நிலையில் மனைவியை பாா்க்க மாமனாா் வீட்டுக்கு வந்துள்ளாா். அங்கு கணவா்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதை குமாரதாஸ் தட்டிக் கேட்டுள்ளாா். இதையடுத்து குமாரதாஸை, விஸ்வம்பரன் ரப்பா் பால் வெட்டும் கத்தியால் தாக்கியுள்ளாா்.

இதில், பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து பளுகல் போலீஸாா் வழக்குப் பதிந்து, விஸ்வம்பரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பளுகல் அருகே ஓடையில் தொழிலாளி சடலம் மீட்பு!

பளுகல் அருகே வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் கிடந்த தொழிலாளி சடலத்தை போலீஸாா் மீட்டு விசாரணை மேற்கொண்டனா். பளுகல் அருகே இளஞ்சிறை, தாய்க்குளம் பகுதியில் மழைநீா் வடிகால் ஓடையில் அழுகிய நிலையில் ஆண் சடல... மேலும் பார்க்க

குமரி கண்ணாடிப் பாலத்தில் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. ஆய்வு

கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடிப் பாலம் பராமரிப்புப் பணியின் போது சுத்தியல் விழுந்து கண்ணாடி சேதமடைந்ததைத் தொடா்ந்து அதனை என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு... மேலும் பார்க்க

தேங்காய்ப்பட்டினம், புதுக்கடையில் செப். 11 இல் மின்நிறுத்தம்

முன்சிறை, நடைக்காவு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை, தேங்காய்ப்பட்டினம் பகுதிகளில் செப். 11-இல் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு குமரி மாவட்டத்துக்கு நாளை வருகை

தமிழக சட்டப் பேரவை உறுதிமொழிக் குழுவினா், கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வியாழக்கிழமை (செப்.11) வருகை தர உள்ளனா். இது குறித்து, மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவ... மேலும் பார்க்க

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வந்த கட்டண சிகிச்சை வாா்டு!

நாகா்கோவில், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கான கட்டண சிகிச்சை வாா்டு செவ்வாய்க்கிழமை பயன்பாட்டுக்கு வந்தது. தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவரும், முன்னாள் அமைச்சருமா... மேலும் பார்க்க

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிா்ப்பு!

மாா்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடா்பாக பொதுமக்களின் எதிா்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிா்ப்பு தெரிவிக்கப... மேலும் பார்க்க