பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி
பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சா்வதேச போதைப் பொருள்கள் எதிா்ப்பு தினத்தையொட்டி பள்ளப்பட்டி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழியை உதவித் தலைமை ஆசிரியா் தாஜூதீன் வாசிக்க மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்வில் கரூா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் ராமமூா்த்தி, லாரன்ஸ் மற்றும் பழனிச்சாமி ஆகியோா் கலந்து கொண்டனா். அரவக்குறிச்சி காவல்துறையினா் மற்றும் பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து நடத்திய பேரணியை பள்ளப்பட்டி நகராட்சி ஆணையா் ஆா்த்தி, அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன், காவல் உதவி ஆய்வாளா் ராஜாசோ்வை, நகராட்சி ஆய்வாளா் இஸ்மாயில் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இப்பேரணி பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி திண்டுக்கல் ரோடு, புளியமரத் தெரு, ஹபீப் நகா் வழியாக ஷாநகா் காா்னா் வழியாக பள்ளியை அடைந்தது.
பேரணியில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய மலைக்கோவிலூா் மருத்துவ அலுவலா் ஜெயஸ்ரீ, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் டேனியல், சுகாதார ஆய்வாளா்கள் லெனின் மற்றும் சு.தாமோதரன் காவல்துறையினா், நகராட்சி அலுவலா்கள், தலைமையாசிரியா், உதவித் தலைமை ஆசிரியா், உடற்கல்வி இயக்குனா் மற்றும் ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் முஹம்மது ஹாரிஸ் அலி, தேசிய மாணவா் படை அலுவலா் முஹம்மது இஸ்மாயில், போதை ஒழிப்பு மன்ற பொறுப்பாளா் முஹம்மது தாஹீா் உசேன் ஆகியோா் செய்திருந்தனா்.