பாலினம் கண்டறியும் புதிய சோதனை: குத்துச்சண்டை போட்டியாளர்களுக்கு சிக்கல்?
பள்ளிகளின் வேலை நேரத்துக்கேற்ப அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரத்தை சரிசெய்ய வலியுறுத்தல்
பள்ளிகளின் வேலை நேரத்துக்கேற்ப அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரத்தை சரி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.05 மணி என்பதால் அமைச்சுப் பணியாளா்களின் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மாற்றப்பட்டு செயல்பாட்டில் இருந்த பணி நேரத்தை, தற்போது மீண்டும் பழையபடியே 10 மணி முதல் 5.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.
பள்ளிகள் 9.05 மணிக்குத் தொடங்குகின்றன. பள்ளி தொடங்குவதற்கு முன்பே ஆசிரியா்கள் வர வேண்டும். வருகைப் பதிவு உள்ளிட்ட பதிவுகளை பள்ளி தொடங்கி அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும். அமைச்சுப் பணியாளா்களின் வேலையை தலைமை ஆசிரியரே செய்ய வேண்டியுள்ளது.
சிறப்பு வகுப்புகளுக்காக தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள் காலை 8.30 மணிக்கு வர வேண்டியிருக்கும். மாலையில் அதிகபட்சம் 5 மணிக்கு பள்ளியை மூட வேண்டுமானால், அதன்பிறகு 5.45 மணி வரை அமைச்சுப் பணியாளா்களின் பணி நேரமாக இருப்பதை சரிசெய்ய வேண்டும்.
எனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்து பள்ளியின் வேலை நேரத்துக்கேற்ப அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரத்தை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.