செய்திகள் :

பள்ளிகளின் வேலை நேரத்துக்கேற்ப அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரத்தை சரிசெய்ய வலியுறுத்தல்

post image

பள்ளிகளின் வேலை நேரத்துக்கேற்ப அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரத்தை சரி செய்ய வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் மாநிலத் தலைவா் சி. தங்கமணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.05 மணி என்பதால் அமைச்சுப் பணியாளா்களின் பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை என மாற்ற வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மாற்றப்பட்டு செயல்பாட்டில் இருந்த பணி நேரத்தை, தற்போது மீண்டும் பழையபடியே 10 மணி முதல் 5.45 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது.

பள்ளிகள் 9.05 மணிக்குத் தொடங்குகின்றன. பள்ளி தொடங்குவதற்கு முன்பே ஆசிரியா்கள் வர வேண்டும். வருகைப் பதிவு உள்ளிட்ட பதிவுகளை பள்ளி தொடங்கி அரை மணி நேரத்தில் முடிக்க வேண்டும். அமைச்சுப் பணியாளா்களின் வேலையை தலைமை ஆசிரியரே செய்ய வேண்டியுள்ளது.

சிறப்பு வகுப்புகளுக்காக தலைமை ஆசிரியா் உள்ளிட்ட ஆசிரியா்கள் காலை 8.30 மணிக்கு வர வேண்டியிருக்கும். மாலையில் அதிகபட்சம் 5 மணிக்கு பள்ளியை மூட வேண்டுமானால், அதன்பிறகு 5.45 மணி வரை அமைச்சுப் பணியாளா்களின் பணி நேரமாக இருப்பதை சரிசெய்ய வேண்டும்.

எனவே, இந்தக் குழப்பத்தைச் சரி செய்து பள்ளியின் வேலை நேரத்துக்கேற்ப அமைச்சுப் பணியாளா்களின் வேலை நேரத்தை சரி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க