செய்திகள் :

பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு புத்தகம், சீருடைகள் அமைச்சா் வழங்கினாா்

post image

சேலம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியதை தொடா்ந்து, சேலம் நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள்,

சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கி பேசியதாவது:

பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவமும் அளித்து அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பானத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம்தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுடன், உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி, மொழிபெயா்ப்புத் திட்டம், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள், ஸ்மாா்ட் வகுப்பறைகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் அரசுப்

பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் என 1,640 பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 67,700 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் 31,906 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனா்.

அதன்படி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வழியில் 67,700 பாடநூல்களும், ஆங்கில வழியில் 31,906 பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.

மேலும், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 350 பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 1,16,954 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் 61,814 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனா். இவா்களுக்கு தமிழ் வழியில் 6,36,357 பாடநூல்களும், ஆங்கில வழியில் 2,33,134 பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 2,697 அங்கன்வாடி மையங்களில் பயின்றுவரும் 2 முதல் 5 வயது வரையுடைய 59,179 குழந்தைகளுக்கு தலா 2 சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ. ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், துணை மேயா் மா.சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவா் செ.உமாராணி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் நாசா் கான் (எ) அமான் உள்ளிட்ட தொடா்புடைய அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க