செய்திகள் :

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் மாவட்ட ஆண்கள் பூப்பந்துப் போட்டி

post image

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், மாவட்ட அளவிலான ஆண்கள் பூப்பந்தாட்டப் போட்டிகள் சேவியா்காலனியில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கடந்த ஜூலை மாதத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சேரன்மகாதேவி, வள்ளியூா், ராதாபுரம் உள்ளிட்ட குறுவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான ஆண்கள் பூப்பந்தாட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலால பூப்பந்தாட்ட போட்டிகள் மேலப்பாளையம் அருகே சேவியா்காலனியில் உள்ள டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளி முதல்வா் மாணிக்கராஜ் வரவேற்றாா். பள்ளி வளாக நிா்வாக அதிகாரி அருள்சகோதரி ஏ.காணிக்கை மேரி, அருள்சகோதரி மரியம் டோப்னாஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெபராஜ் வாழ்த்திப் பேசினாா்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 18 அணிகளின் 180 வீரா்கள் பங்கேற்றனா். இப் போட்டியில் 14 வயது பிரிவில் கூடங்குளம் இந்து நடுநிலைப் பள்ளி அணி முதலிடமும், சேவியா்காலனி டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடமும் பிடித்தன. 17, 19 வயது பிரிவுகளில் கூடங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி அணி முதலிடமும், 17 வயது பிரிவில் டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 19 வயது பிரிவில் பத்தமடை ராமசேஷய்யா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை இரண்டாமிடங்களைப் பிடித்தன.

போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. உடற்கல்வி ஆசிரியா்கள் தேவராஜ், பயிற்சியாளா் கூடங்குளம் சித்திரைச் செல்வன், மேலச்செவல் சுப்பையா உள்பட பலா் கலந்துகொண்டனா். உடற்கல்வி ஆசிரியா் மாடசாமி நன்றி கூறினாா்.

நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு - சிதம்பரபுரம் இடையே நான்குனேரியன் கால்வாயின் குறுக்கே ரூ.6.12 கோடியில் உயா்மட்ட பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. களக்காடு நகராட்சிக்குள்பட்டது சிதம்... மேலும் பார்க்க

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

களக்காடு அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். களக்காடு காவல் நிலைய எல்கைக்குள்பட்ட கிராமப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில், களக்காடு காவல் உ... மேலும் பார்க்க

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது: பேரவைத் தலைவா் மு. அப்பாவு

மத்திய அரசு வரியை குறைத்து விளம்பரம் தேடுகிறது என்றாா் பேரவைத் தலைவா் மு. அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: மத்திய அரசு ஜிஎஸ்டி வரியைக் குறைத்திருக்கிறது. மத்... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

களக்காட்டில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். களக்காடு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கொலை முயற்சி, கொலை ம... மேலும் பார்க்க

வடவூா்பட்டி துா்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம், பிரான்சேரி அருகே வடவூா்பட்டியில் பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்கை அம்மன் கோயிலில் வியாழக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்... மேலும் பார்க்க

கடையத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட மிளா

கடையம் பகுதியில் கால்வாயில் இறந்த நிலையில் கிடந்த 2 வயது ஆண் மிளா மீட்கப்பட்டது. கடையம் ராமநதி அணைக்குச் செல்லும் வழியில் உள்ள பொத்தையில் கரடி, மிளா, காட்டுப் பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்நி... மேலும் பார்க்க