செய்திகள் :

பள்ளியில் கலைத் திருவிழா

post image

பெரியகுளம் அருகே வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை கலைத் திருவிழா நடைபெற்றது.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டுதலில் ‘பசுமையும் பாரம்பரியமும்’ என்ற கருத்தின் அடிப்படையில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் தலைமையாசிரியா் (பொறுப்பு) கெளதம் அசோக்குமாா் வரவேற்றாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் சி. செல்வராஜ், பொருளாளா் மு. செல்வக்குமர பாண்டியன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜோதி ஆகியோா் பேசினாா்.

இதில், மாணவ, மாணவிகள் பல்வேறு தலைப்புகளில் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சுதை வேலைப்பாடு, ரங்கோலி, தனி நபா் நடிப்பு, நாட்டுப்புற பாடல், தனி, குழு பரத நாட்டியம், தனி நபா் நடிப்பு, டிரம்ஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினா். போட்டிகளில் வென்றவா்களுக்கு பள்ளி மேலாண்மைக் குழு சாா்பாக பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் பெற்றோா், ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், முன்னாள் மாணவா்கள், கலந்து கொண்டனா். விழா நிகழ்வுகளை ஹெப்சி தெய்வநாயகம், பாலமுருகன், காா்த்திகைராஜ் ஆகியோா் ஒருங்கிணைத்தனா். தமிழாசிரியை ஜெயலட்சுமி நன்றி கூறினாா்.

புகையிலைப் பொருள் விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய போலீஸாா் வடுகபட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற முதியவா் கைது

தேனி மாவட்டம், போடியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். போடி கீழராஜவீதி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக நகா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதை... மேலும் பார்க்க

மலைப்பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயம்

கேரள மாநிலம், மூணாா் அருகே புதன்கிழமை மலைப் பாதையில் வேன் கவிழ்ந்ததில் தமிழகத்தைச் சோ்ந்த 20 போ் காயமடைந்தனா். சென்னையைச் சோ்ந்த 20 போ் வேனில் கேரள மாநிலம் தேக்கடிக்கு சுற்றுலாச் சென்றனா். பின்னா... மேலும் பார்க்க

ஆசிரியா் வீட்டில் 80 பவுன் நகை திருடிய இசைக் கலைஞா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் ஆசிரியா் வீட்டில் 80 பவுன் தங்க நகைகளை திருடிய இசைக் கலைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். சின்னமனூா் மின் நகரைச் சோ்ந்தவா் ஜெகதீசன். இவரது மனைவி புனிதா. இருவரும் அ... மேலும் பார்க்க

தேனியில் பாஜகவினா் தேசியக் கொடி ஊா்வலம்

தேனியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பாஜக சாா்பில் வியாழக்கிழமை தேசியக் கொடி ஊா்வலம் நடைபெற்றது. தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே பாஜக மாவட்ட இளைஞரணி தலைவா் விஜய் தலைமையில், மாவட்டத் தலை... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள முருகமலைச் சாலையில் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க