செய்திகள் :

பள்ளி கழிவறையில் பதுங்கி இருந்து 7 வயது மாணவி பாலியல் வன்கொடுமை - ராஜஸ்தானில் அதிர்ச்சி

post image

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 7 வயது பள்ளி மாணவி கழிவறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். அம்மாணவி கழிவறைக்கு சென்றபோது அங்கு மறைந்திருந்த நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஆசிரியையிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் பள்ளி தடுப்பு சுவர் அருகில் வசித்து வந்தது தெரிய வந்தது.

அவரை போலீஸார் கைது செய்து தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி அளித்த பேட்டியில், ''சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் பள்ளி சுவர் ஏறி குதித்து பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த கழிவறையில் மறைந்து இருந்தார். கழிவறைக்குள் நுழைந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு எப்படி வந்தாரோ அதே போன்று சுவர் ஏறி குதித்து வெளியில் குதித்து தப்பிச்சென்றுவிட்டார். பள்ளி சுவருக்கு அருகில் வசித்து வந்த நபரை பிடித்து விசாரித்து வருகிறோம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம்''என்று தெரிவித்தார்.

இது குறித்து முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் அளித்த பேட்டியில், ''7 வயது மாணவி பள்ளியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில் இருந்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது என்று தெரிகிறது. மாநிலத்தின் தலைநகரில் இருக்கும் பள்ளியில் கூட மாணவிக்கு பாதுகாப்பு இல்லையென்றால் வேறு எங்கே பாதுகாப்பு இருக்கப்போகிறது” என்று கேள்வி எழுப்பினார்.

திண்டுக்கல் : சாதி மாறி திருமணம் செய்த இளைஞர் வெட்டிக் கொலை - பெண்ணின் தந்தை கைது

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த ராமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (24). பால் கறவை தொழில் செய்து வருகிறார்.கணபதிபட்டி கிராமத்தில் பால் கறவைக்கு சென்ற இடத்தில் சந்திரன் என்பவ... மேலும் பார்க்க

விளையாட்டாக கேபிளை இழுத்த சிறுவன்; ட்ரில்லிங் மெஷின் நெற்றியில் துளைத்து பலி - கேரளாவில் சோகம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோயில் மேற்கு வாசல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி சுனிதா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. மூத்த மகன் துருவ் நாத்துக்கு இரண்டரை வயது ஆகிறது. ... மேலும் பார்க்க

நாமக்கல்: கிட்னி விற்பனையில் ஈடுபட்ட 2 புரோக்கர்கள் கைது; சிறப்பு புலனாய்வு குழு விசாரணை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறி கூலித் தொழிலாளர்களைக் குறிவைத்து சட்டவிரோதமாக கிட்னி விற்பனை செய்து வந்தது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வி... மேலும் பார்க்க

சபரிமலை: 417 கிராம் தங்கம் திருட்டு, 10 பேர் மீது வழக்கு - தேவசம் போர்டு தலைவர் சொல்வதென்ன?

சபரிமலை ஐயப்பன் கோவில் துவாரபாலகர் சிலையில் கவசங்கள் மீது தங்கம் பூசுவதாக கூறி, 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அதை எடுத்துச் சென்று மோசடி செய்யப்பட்டதாகவும், 2019 ஆகஸ்ட் மாதம் ஐயப்பன் கோயில் கருவறை வாசலில... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: அரசுப் பேருந்தில் சென்ற பள்ளி மாணவிக்குப் பாலியல் தொல்லை; நடத்துநர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி ஒன்றில் அப்பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி ஒரத்தநாட்டில் உள்ள தனியார... மேலும் பார்க்க

Uttar Pradesh: சிறையில் காசோலை திருட்டு; விசாரணையில் பகீர் தகவல்; அதிகாரி, கைதிகள் சிக்கியது எப்படி?

உத்தரப்பிரதேச மாநிலம் அசாம்கர் மாவட்ட சிறைக்குச் சொந்தமான வங்கிக்கணக்கில் இருந்து சமீபத்தில் ரூ.2.6 லட்சம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் எடுக்கப்பட்டு இருப்பதை சிறை அதிகாரி ஆதித்ய குமார் கண்டுபிட... மேலும் பார்க்க