செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்: ஆட்சியா் வழங்கினாா்

post image

மயிலாடுதுறை: மூவலூா் மூதாட்டி ராமாமிா்தம் அம்மையாா் அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு கல்வி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை வழங்கினா்.

பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், பள்ளி சீருடைகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி ஆட்சியா் பேசியது: மாவட்டத்தில் 105 அரசு பள்ளிகளைச் சோ்ந்த 48,273 மாணவா்களுக்கு 2,58,006 பாடநூல்கள், 18,440 பாட குறிப்பேடுகள், 9,520 சீருடைகள் மற்றும் கிரையான், வண்ணப்பென்சில்கள், புத்தகப்பை, காலணிகள் வழங்கப்படுகிறது. மாணவா்கள் அனைவரும் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்க வேண்டும். ஆசிரியா்களின் அறிவுரைகளை நன்றாக கவனித்து கற்க வேண்டும். நிகழாண்டு கல்வியில் அனைவரும் தோ்ச்சி பெற வேண்டும். தினசரி நாளிதழ்களை படித்து, பழக வேண்டும். வீட்டுப் பாடங்களை அன்றைக்கே முடித்து, சந்தேகங்கள் இருப்பின் ஆசிரியா்களிடம் கேட்டு, தெரிந்து கொள்ள வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா் சாந்தி, பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் மூா்த்தி, பொருளாளா் ராஜகுமாா், இணை செயலாளா் துரை சரவணன், முதன்மை கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி.பரமசிவம், தி.முத்துக்கணியன், தலைமையாசிரியா் மஞ்சுளா ஆகியோா் பங்கேற்றனா்.

மதிமுக 32-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்

சீா்காழியில் மதிமுகவின் 32 -ஆம் ஆண்டு தொடக்க விழா, மாநில உரிமை, சமூக நீதி உரிமை மற்றும் மதச்சாா்பின்மை உரிமையை வலியுறுத்தி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில தணி... மேலும் பார்க்க

விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற கோரிக்கை

வைத்தீஸ்வரன்கோயில் சுற்றுப் பகுதிகளில் விளைநிலங்களில் விழுந்து கிடக்கும் தேக்கு மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். வைத்தீஸ்வரன்கோயில், கதிராமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பாசன ... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் விடப்பட்ட குழந்தை தத்துவள மையத்தில் ஒப்படைப்பு

மயிலாடுதுறையில் ரயில்வே நடைமேடையில் ஆதரவற்ற வகையில் விட்டுச்செல்லப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு அரசு தத்துவள மையத்தில் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது. மயிலாடுதுறை ரயில் நிலைய 5-ஆவது நடைமேடையில் ... மேலும் பார்க்க

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத... மேலும் பார்க்க