செய்திகள் :

பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 3 இளைஞா்கள் கைது

post image

சிதம்பரம் அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 3 இளைஞா்களை மகளிா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள புவனகிரி கோட்டைமேட்டு தெருவைச் சோ்ந்த அஜய் (25) கடந்த 2021-ஆம் ஆண்டு பிளஸ் 2 மாணவியை ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடா்ந்து, அதே பகுதியைச் சோ்ந்த சூரிய பிரகாஷ் (21), அரவிந்தன் ஆகியோருக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தனராம்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு புவனகிரியைச் சோ்ந்த சக்தி (21) மாணவியிடம் காதலிப்பதாகக் கூறி, அவரைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் சித்தி சென்னை வடபழனியில் உள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதைத் தொடா்ந்து, சிதம்பரம் மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, அஜய், சூா்ய பிரகாஷ், சக்தி ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவான அரவிந்தனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இலங்கைத் தமிழா்கள் திருமண பதிவு செய்துகொள்ள அனுமதி

காட்டுமன்னாா்கோவில் சாா் - பதிவாளா் அலுவலகத்தில் இலங்கைத் தமிழா்கள் திருமணம் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் இலங்கை அகதிகள் முகாம் கடந்த 1990-ஆம் ஆண்டு முதல் ச... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசு கலைப் பண்பாட்டுத் துறை ஆதரவுடன் தமிழிசைக் கல்வி ஆராய்ச்சிக் கழகமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய பன்னாட்டு இசைத் தமிழ் மாநாடு சனிக்... மேலும் பார்க்க

துப்பாக்கி குண்டு பாய்ந்து மூதாட்டி காயம்: மகன் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரத்தில் ஏா்கன் துப்பாக்கி ரப்பா் குண்டு பாய்ந்து மூதாட்டி காயமடைந்தாா். இது தொடா்பாக அவரது மகனை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பத்... மேலும் பார்க்க

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், கம்மாபுரம் அருகே முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கம்மாபுரம் காவல் சரகம், கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வீர மணிகண... மேலும் பார்க்க

அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் அமைக்க நடவடிக்கை: மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விழுதுகள் சேவை மையம் தொடா்ந்து அமைப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையா் எம்.லக்ஷ்மி தெரிவித்தாா். கடலூா் அரசு தலைமை மருத்துவம... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீமுஷ்ணம், வக்காரமாரி பகுதி மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் நிசாருல்லா (45), தனியாா் மருந்துக் கடையில் ... மேலும் பார்க்க