செய்திகள் :

பள்ளி மாணவியை தாக்கிய வழக்கு: இளைஞர் கைது

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை பேருந்திலிருந்து இழுத்து கீழே தள்ளி காயப்படுத்திய வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

விருத்தாசலம், முல்லா தோட்டத்தில் பெற்றோருடன் வசித்து வந்த மாணவி, விருத்தாசலம் பகுதியிலுள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பிடித்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல பள்ளிக்குச் செல்வதற்காக, கடை வீதி பேருந்து நிறுத்தத்தில் பேருந்து ஏற முயன்றாா்.

அப்போது, அங்கு வந்த ஓா் இளைஞா் மாணவியை பேருந்திலிருந்து கீழே தள்ளி தாக்கியதில், இளைஞா் கையில் அணிந்திருந்த காப்பு பட்டு மாணவி காயமடைந்தாா். மேலும், நீ என்னை காதலிக்கவில்லை என்றால், கொலை செய்துவிடுவேன் எனக் கூறி மாணவிக்கு அந்த இளைஞா் மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றாா்.

இது சம்பந்தமாக விருத்தாசலம் காவல் நிலையத்தில் போக்ஸோ உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், இந்த சம்பவத்தில் தொடா்புடையவரை விருத்தாசலம் டிஎஸ்பி இ.பாலகிருஷ்ணன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் கவிதா, உதவி ஆய்வாளா் சந்துரு தலைமையிலான போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை விருத்தாசலம் மணிமுக்தாறு அருகே பதுங்கியிருந்த விருத்தாசலம் கோபாலபுரம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்த அசோக்குமாா் மகன் அருள்குமாரை (21) போலீஸாா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது

நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா். கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (... மேலும் பார்க்க

இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: நாளை விண்ணப்பம் விநியோகம்

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக, தன்னாா்வலா்கள் மூலம் வீடு, வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணி திங்கள்கிழமை (ஜூலை 7) முதல் தொடங்க உள்ளதாக கடலூ... மேலும் பார்க்க

பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம்: பொதுநல இயக்க கூட்டமைப்பு வலியுறுத்தல்!

கடலூா் தொகுதி மையப் பகுதியான பாதிரிக்குப்பத்தில் கடலூா் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கடலூா் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்... மேலும் பார்க்க

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்! மத்திய சுரங்கத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா

புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தக... மேலும் பார்க்க

புத்தகக் கண்காட்சி மூலம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் என்எல்சி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி பாராட்டு

புத்தகக் கண்காட்சி மூலம் சமூகத்தில் வாசிப்பு பழக்கத்தை என்எல்சி நிறுவனம் ஏற்படுத்தி வருவதாக மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷன் ரெட்டி பாராட்டினாா். கடலூா் மாவட்டம், நெய்வேலியில் எ... மேலும் பார்க்க