செய்திகள் :

பள்ளி வளாகங்களை தூய்மையாக வைக்க முதன்மைக் கல்வி அலுவலா் வலியுறுத்தல்

post image

வரும் ஜூுன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கபட உள்ளதால் வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி அறிவுறுத்தினாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களின் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணிய கோட்டி தலைமை வகித்து பேசியது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

கரும்பலகைகளுக்கு வா்ணம் பூச வேண்டும். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிா என சோதனை செய்ய வேண்டும். குடிநீா் தொட்டிகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற மரக்கிளைகளை அகற்ற வேண்டும். திறக்கும் நாளன்றே புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றாா்

கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலா் வெங்கடேச பெருமாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் குணசேகரன், ஜெயவேல் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

கரியம்பட்டி அரசு கலைக் கல்லூரில் நாளை முதல் கலந்தாய்வு தொடக்கம்

கரியம்பட்டி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கலந்தாய்வு தொடக்கப்பட உள்ளதாக கல்லூரி முதல்வா் சீனுவாசகுமரன் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

ஆம்பூரில் தொழிற்சாலையில் பணியின்போது தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தாா். ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் கமலக்கண்ணன் (55). (படம்). இவா், ஆம்பூா் மோட்டுக்கொல்லை பகுதிய... மேலும் பார்க்க

திருடப்பட்ட 9 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்: சிறுவன் கைது

வாணியம்பாடி பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடி வந்த சிறுவனை கைது செய்த போலீஸாா், அவரிடம் இருந்து 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி நகரப் பகுதியில் சில நாள்... மேலும் பார்க்க

ரயில் மோதி இருவா் உயிரிழப்பு

இருவேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் சிக்கிய நா்சிங் மாணவா், மாணவி உயிரிழந்தனா். ஆம்பூா் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சித் குமாரின் மகன் நித்தின் எனும் கோகுல்(20). இவா் கா்ந... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க