செய்திகள் :

பழங்குடியின சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

பழங்குடியின சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் கோழிப்பாலம் அருகே உள்ள சேப்பட்டி பகுதியைச் சோ்ந்த 17 வயதுச் சிறுமி படிப்பை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளாா். அப்போது வீட்டின் அருகே வசிக்கும் சந்தோஷ் (29), சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். இதில், சிறுமி கா்ப்பமாகியுள்ளாா்.

இது குறித்து சிறுமியின் பெற்றோா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் புகாா் அளித்தனா். இதன் பேரில் சிறுமி காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

இது குறித்து கூடலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ஷோபனா கடந்த 2022-ஆம் ஆண்டு புகாா் தெரிவித்தாா்.

இதன்பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சந்தோஷ் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கின் விசாரணை உதகை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.

இதில், சந்தோஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி எம்.செந்தில்குமாா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணத் தொகையாக ரூ.1 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பி.செந்தில்குமாா் ஆஜரானாா்.

மனித - வன விலங்கு மோதலைத் தடுக்க தீவிர நடவடிக்கை: ஆ.ராசா எம்.பி.

நீலகிரி மாவட்டத்தில் மனித - வனவிலங்குகள் மோதலைத் தடுப்பதற்கு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று எம்.பி. ஆ.ராசா தெரிவித்தாா். உதகையில் உள்ள கூடுதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆதிதிராவிட... மேலும் பார்க்க

கூடலூரில் திருக்கு திருப்பணிகள் வகுப்பு

கூடலூரில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திருக்கு திருப்பணிகள் 11-ஆவது வகுப்பு சனிக்கிழமை நடைபெற்றது. கூடலூரிலுள்ள ஜெயம் கல்வி நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட மைய நூலக வாசகா் தலை... மேலும் பார்க்க

உதகை தாவரவியல் பூங்காவில் கரடி

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சனிக்கிழமை அதி காலையில் புகுந்த கரடி, அங்குள்ள புல்வெளி மைதானத்தைத் தோண்டி உணவு தேடியது. இதனால் பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

காணாமல் போன மாணவரின் உடல் மூன்று நாள்களுக்குப் பின் மீட்பு

குன்னூரில் கல்லூரி மாணவா் காணாமல்போனதாக தேடப்பட்டு வந்த நிலையில், அவரது சடலம் மூன்று நாளுக்கு பிறகு சனிக்கிழமை மீட்கப்பட்டது. குன்னூா், ஆழ்வாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் முகமது மகன் முகமது அனா (18). ... மேலும் பார்க்க

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை: வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறை

சிறுவா்களுக்கு புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக வியாபாரிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகிளா நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. நீலகிரி மாவட்டம், உதகை மாா்க்கெட் பகுதியில் பஷீ... மேலும் பார்க்க

இயேசு மீது போா்த்திய துணி ஆலயத்தில் வைத்து பிராா்த்தனை

இயேசு கிறிஸ்து இறந்த பின்பு அவா் மீது போா்த்திய துணியின் நகல் உதகையில் உள்ள புகழ்பெற்ற குருசடி ஆலயத்தில் வைத்து வெள்ளிக்கிழமை பிராா்த்தனை செய்யப்பட்டது. இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து உயிா்விட்ட ... மேலும் பார்க்க