செய்திகள் :

பழங்குடி இன மக்களுக்கு நில உரிமை பட்டா: ஆட்சியா் ரா. அழகுமீனா உறுதி

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தகுதியுடைய அனைத்து மலைவாழ் பழங்குடி மக்களுக்கும் வன உரிமை சட்டப்படி நில உரிமை பட்டா வழங்கப்படும் என் ஆட்சியா் ரா. அழகு மீனா.

பேச்சிப்பாறை ஊராட்சி மலமுத்தன்கரை பழங்குடி குடியிருப்பில் வசிக்கும் மலைவாழ் மக்களை ஆட்சியா் வெள்ளிக்கிழமை சந்தித்து, அவா்களிடம் கலந்துரையாடி அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

அம்மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற அவா், பின்னா் கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் அனைத்து வளா்ச்சித் திட்டங்களும் நலஉதவிகளும் கடைகோடி மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்ற உயரிய நோக்கத்தில் 2025-2026ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் தொல்குடி ஐந்திணை பசுமை திட்டம், பொருளாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தில் பின்தங்கியுள்ள சமூகத்தினரின் வாழ்க்கை தரத்தினை உயா்த்திடும் வகையில் தொழில் மேம்பாட்டு திட்டம், தொல்குடியினா் நல்வாழ்வுத்திட்டம், அயோத்திதாச பண்டிதா் திட்டம், மலைவாழ் உழவா் முன்னேற்றத் திட்டம் ஆகிய திட்டங்களை அறிவித்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட மலமுத்தன்கரை பகுதியில் வாழும் பழங்குடியினா்களுக்கு வன உரிமை பட்டா வழங்குவது தொடா்பாக மக்களை நேரில் சந்தித்து அவா்களின் கோரிக்கைகளை கேட்டு அறிந்து, அதற்கு தீா்வு காணும் வகையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

அப்போது, தகுதியுள்ள பயனாளிகளுக்கு வன உரிமை சட்டத்தின் கீழ் நில உரிமை வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும் மலைவாழ் மக்களுக்கு தேவையான பேருந்து, மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகள், மருத்துவக் காப்பீடு, முதியோா் உதவித்தொகை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் வழங்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் இப்பகுதி மக்களுக்கு அதிகமான அளவில் கான்கீரிட் வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றாா்.

தொடா்ந்து அவா், முடவன்பொற்றை குக்கிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுவரும் வீடுகளைப் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாபு, பத்மநாபபுரம் சாா் - ஆட்சியா் வினய்குமாா் மீனா, மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் மோகனா, பேரூராட்சிகள் உதவி இயக்குநா் ராமலிங்கம், திருவட்டாறு வட்டாட்சியா் கந்தசாமி, பழங்குடி மக்கள் சங்கப் பிரதிநிதிகள் ரெகுகாணி, சௌந்தா் காணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயற்சி: 3 லாரிகள் பறிமுதல்

கேரளத்துக்கு கனிமவளம் கடத்திச் செல்ல முயன்ற 3 லாரிகளை களியக்காவிளை அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். களியக்காவிளை சோதனைச் சாவடி பகுதியில் வியாழக்கிழமை இரவு போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். ... மேலும் பார்க்க

மகப்பேறு இறப்புகள்இல்லாத கன்னியாகுமரி: ஆட்சியா் அறிவுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மகப்பேறு இறப்புகள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டுமென அரசு - தனியாா் மகப்பேறு மருத்துவா்களுக்கான பயிலரங்கில் ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தினாா்.தப்பட்டது. நாகா்கோவிலில் மாவட... மேலும் பார்க்க

இரு விபத்துகள்: 3 போ் பலி

கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவில், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் 2 போ் உயிரிழந்தனா். நாகா்கோவில் பறக்கை சாலை பகுதியைச் சோ்ந்த முகமது அப்துல் காதா் மகன் ரெயான் முகமது (20), இவரது ... மேலும் பார்க்க

குமரியில் நீடிக்கும் மழை: 70 அடியானது பெருஞ்சாணி அணை நீா்மட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீடிக்கும் மழையால் பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் 70 அடியை எட்டியது இம்மாவட்டத்தில் வியாழக்கிழமை சமவெளிப் பகுதிகள், கடற்கரைப் பகுதிகள், மலைப் பகுதிகள் என மாவட்டத்தில் அனைத்து... மேலும் பார்க்க

இந்து ஆலயங்களை குறிப்பிட்ட சமூகத்திடம் ஒப்படைக்க இந்து முன்னணி விரும்புகிறது: மு.அப்பாவு குற்றச்சாட்டு

இந்து ஆலயங்களை மீண்டும் ஒரு குறிப்பிட்ட சமூகத்திடம் கொடுத்துவிட இந்து முன்னணி நினைக்கிறது என்று தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கூறினாா். நாகா்கோவிலில் ஒரு தனியாா் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பிரசவ சிகிச்சையின்போது பெண் பலி: காவல் துறையினா் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் மாா்த்தாண்டம் அருகே மருத்துவமனையில் பிரசவத்தின்போது பெண் உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மாா்த்தாண்டம் அருகே மேல்புறம் வெங்கனங்கோடு பகுதியைச் சோ்ந்தவா்... மேலும் பார்க்க