செய்திகள் :

பழநி: உள்கட்சி மோதல், முகநூல் பதிவு.. பெண்ணை அவதூறாக பேசிய வழக்கில் பாஜக பிரமுகர் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம் பழநி பெரியப்பாநகரைச் சேர்ந்தவர் பாஜக மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் கனகராஜ். இவர் பாஜக நிர்வாகியான ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த எல்லைத்துரை மனைவி குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று வெளியானது.

அதில் கனகராஜ், உள்கட்சி பிரச்னை விவகாரங்கள் குறித்தும், தன்னைப் பற்றி முகநூலில் செய்துள்ள பதிவுகளை நீக்கும்படி எல்லைத்துரையை மிரட்டுகிறார். மேலும் எல்லைத்துரையின் மனைவி குறித்தும் அவதூறாக பேசுகிறார்.

பழநி

இதுகுறித்து எல்லைத்துரையின் மனைவி புவனேஸ்வரி பழநி தாலூகா போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், பெண்ணை மானபங்கம் செய்யும் வகையில் அவதூறாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கனகராஜை கைது செய்தனர்.

நேற்று பழநி தாலுகா காவல் நிலையம் அழைத்துவரப்பட்ட கனராஜூக்கு ஆதரவாக பாஜகவினர் திரண்டனர். யாரையும் உள்ளே வந்துவிடாமல் தடுப்பதற்காக காவல் நிலையத்தை போலீஸார் பூட்டினர். இதனால் பழநியில் பரபரப்பு நிலவியது.

கைது

இதுகுறித்து பழநியைச் சேர்ந்த பாஜகவினரிடம் விசாரித்தபோது, ``எல்லைத்துரை கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம் கனகராஜ் தான் என நினைத்து, அவருக்கு எதிராக எல்லைத்துரை முகநூலில் தொடர்ச்சியாக பதிவிட்டு வந்தார். இதை கண்டிக்கும் விதமாக பேசிய கனகராஜின் ஆடியோவை வெளியிட்டதால் பிரச்னை பெரிதாகிவிட்டது. மேலும் கனகராஜ் மீது நடவடிக்கை கோரி எல்லைத்துரை நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தான் கனகராஜை போலீஸார் கைது செய்துள்ளனர்'' என்று தெரிவித்தனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திண்டுக்கல்: நிலத்தகராறில் 3 பேர் கொலையா? கிணற்றில் உடல்களைத் தேடிய போலீஸார்; நடந்தது என்ன?

திண்டுக்கல் அருகே அணைப்பட்டியில் இருதரப்புக்கும் இடையில் நிலப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது.இதில் 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்கள் அணைப்பட்டியில் உள்ள ஒரு கிணற்றில் வீச... மேலும் பார்க்க

சைபர் கிரிமினல்களிடம் ரூ.50 லட்சத்தை இழந்த வயதான தம்பதி தற்கொலை

இணையத்தளக் குற்றவாளிகள் பெண்கள் மற்றும் முதியவர்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன. அதிகமானோர் கோடிக்கணக்கில் பணத்தை இழந்துள்ள... மேலும் பார்க்க

கிரிக்கெட்டர் முதல் ஐடி ஊழியர் வரை - உயர் ரக போதை பொருளால் கோவையை கலங்கடித்த நெட்வொர்க்!

கோவை மாவட்டத்தில் உயர் ரக போதை பொருள்கள் அதிகளவு பயன்படுத்துவதாக புகார் உள்ளது. இந்நலையில் ஆர்.எஸ்.புரம் சுற்று வட்டார பகுதிகளில் உயர் ரக போதை பொருள்கள் விற்பனை செய்யும் ஒரு நெட்வொர்க் குறித்து காவல்த... மேலும் பார்க்க

`கொலை செய்துவிட்டேன், சொல்லிவிடுங்கள்...' - மனைவியைக் கொன்று சூட்கேஸில் உடலை அடைத்த இன்ஜினீயர்

இந்தியாவில் பெங்களூரு சாஃப்ட்வேர் தலைநகரமாக விளங்குகிறது. இதனால் நாடு முழுவதும் இருந்து சாப்ட்வேர் இன்ஜினீயர்கள் பெங்களூரு வந்து வேலை செய்கின்றனர். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த ராக... மேலும் பார்க்க

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் சிக்கிய 70 வயது பாடகர்... ரூ.1.2 கோடியைப் பறித்த சைபர் கிரிமினல்கள்!

நாடு முழுவதும் அப்பாவி மக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து அவர்களிடமிருந்து பணத்தை பறிக்கும் சம்பங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. மும்பை, ஐதராபாத் போன்ற நகரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிக அ... மேலும் பார்க்க

பெங்களூரு: ட்ராலியில் பெண்ணின் உடல் மீட்பு; போலீசாருக்கு போன் செய்த கணவர் கைது!

பெங்களூருவில் 32 வயதுடைய பெண் கௌரி அனில் சம்ப்ரேக்கர் உடலை ட்ராலியில் கண்டெடுத்துள்ளனர் பெங்களூரு போலீசார். தென்கிழக்கு பெங்களூருவை சேர்ந்தவர் ராகேஷ் ராஜேந்திர கெடேகர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் ப... மேலும் பார்க்க