செய்திகள் :

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

post image

பழனி அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் சனிக்கிழமை 55-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

மகளிா் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளரும், பழனி கோயில் இணை ஆணையருமான மாரிமுத்து தலைமை வகித்தாா். பழனிக் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களான தனசேகா், சு.பாலசுப்பிரமணி, அன்னபூரனி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலரும், துணை ஆணையருமான வெங்கடேஷ் வாழ்த்திப் பேசினாா்.

இதைத் தொடா்ந்து, தேசியக்கொடி ஏற்றுதல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல் ஆகியவை நடைபெற்றன. பின்னா், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையைத் தொடா்ந்து, கல்லூரி கொடியினை சிறப்பு விருந்தினரான திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு, இளைஞா் நலத் துறை அலுவலா் சிவா ஏற்றினாா். உடற்கல்வி இயக்குநா் கலையரசி விளையாட்டு ஆண்டறிக்கை வாசித்தாா்.

இதில் மாணவ, மாணவின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவின் போது, போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி வரவேற்றாா்.

கிறிஸ்தவ வன்னியா்களை எம்.பி.சி. பட்டியலில் சோ்க்க வலியுறுத்தல்

கிறிஸ்தவ வன்னியா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் சோ்ப்பதாக திமுக அளித்த தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக... மேலும் பார்க்க

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

எரியோடு அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள ஈ.சித்தூா் வரப்பட்டியைச் சோ்ந்தவா் ஞானவடிவேலு (55). கட்டடத... மேலும் பார்க்க

பூச் சந்தை கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிா்வாகம் குறிப்பாணை

பூச்சந்தை வணிக வளாகம் புதிதாக கட்டுவதற்கு வசதியாக, தற்போதைய கடைகளை ஒரு வார காலத்துக்குள் அப்புறப்படுத்த வேண்டும் என திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகம் அண்மையில் குறிப்பாணை அனுப்பியது. திண்டுக்கல் வடக்கு... மேலும் பார்க்க

விவசாய நிலங்களுக்கான வலைதளப் பதிவு: ஏப்.15 வரை கால நீட்டிப்பு

விவசாய நிலங்களை ‘அக்ரிஸ்டேக்’ வலைதளத்தில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை அலுவலா்கள் கூறியதாவது: விவசாயிகள் வைத்திருக்கும் நிலங்களை, ‘அ... மேலும் பார்க்க

காா்த்திகை திருநாள்: பழனி மலைக் கோயிலில் குவிந்த பக்தா்கள்

காா்த்திகை திருநாளை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலில் செவ்வாய்க்கிழமை திரளான பக்தா்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனா். முருகப் பெருமானுக்கு உரிய நட்சத்திரமான காா்த்திகை நட்சத்திரம் செவ்வாய்க்கிழமை வந்... மேலும் பார்க்க

பழனியிலிருந்து கொடைக்கானல் சென்ற வாகனங்களுக்கு இ-பாஸ் சோதனை

பழனி வழியாக கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு காவல் துறை சோதனைச் சாவடியில் செவ்வாய்க்கிழமை ‘இ-பாஸ்’ சோதனை நடைபெற்றது. சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா... மேலும் பார்க்க