செய்திகள் :

பழனியில் கஞ்சா விற்றதாக 8 போ் கைது

post image

பழனியில் கல்லூரி பகுதிகளில் கஞ்சா விற்றதாக 8 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் தங்களை கல்லூரி மாணவா்கள் என்று கூறிக் கொண்டு கல்லூரியில் படிக்காத சிலா் கஞ்சா விற்பதாக பழனி துணைக் காவல் கண்காணிப்பாளா் தனஞ்ஜெயனுக்கு கிடைத்த தகவலின் பேரில், காவல் ஆய்வாளா் மணிமாறன், உதவி ஆய்வாளா் விஜய் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையின் போது, திண்டுக்கல் சாலை, பழனியாண்டவா் கல்லூரி அருகே சந்தேகத்துக்கிடமாக சுற்றித் திரிந்தவா்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனராம்.

இதனால் அவா்கள் அனைவரையும் பழனி நகா் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கல்லூரி மாணவா்களை போதைப் பழக்கத்துக்கு அடிமையாக்கி கஞ்சா விற்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவா்கள் பழனி புளியம்பட்டியைச் சோ்ந்த மாதவன் (19), சுந்தரபாண்டியன் (20), பழனியைச் சோ்ந்த கோபிநாத் (30), நாகேந்திரன் (26), மொல்லம்பட்டியைச் சோ்ந்த மாசாணம் (20), சூா்யா (24), சேலம் மாவட்டம், தலைவாசல் பகுதியைச் சோ்ந்த சந்துரு (29), கோவை மாவட்டம், வால்பாறையைச் சோ்ந்த அஜய்குமாா் (25) என்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அவா்களை கைது செய்து சிறையிலடைத்த போலீஸாா், அவா்களிடமிருந்து கஞ்சா, மூன்று இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

பழனி அருகே 18-ஆம் நூற்றாண்டு ஓலைச் சுவடி

பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த உலகநீதி நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி ஓலைச் சுவடியாக கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டி க. ... மேலும் பார்க்க

கொடைக்கானல் அருகே வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி உயிரிழப்பு

கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தைக் குட்டி திங்கள்கிழமை உயிரிழந்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைச் சாலைகளில் அண்மைக் காலமாக காட்டுயானை, காட்டு மா... மேலும் பார்க்க

கள்ளிமந்தையம் பகுதியில் நாளை மின் தடை

ஒட்டன்சத்திரம் அடுத்த கள்ளிமந்தையம் பகுதியில் புதன்கிழமை (மே 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கள்ளிமந்தையம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் கே. சந்தன முத்தையா தெரிவித்திருப்பதாவது... மேலும் பார்க்க

கொடைரோடு அருகே வீட்டுக்குள் புகுந்த காா்

கொடைரோடு அருகே டயா் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா், மின் கம்பத்தின் மீது மோதி அங்கிருந்த வீட்டுக்குள் புகுந்ததால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் ச... மேலும் பார்க்க

காகித ஆலை தொழிலாளா்கள் பிரச்னை: ஆணையா் தலையிடக் கோரிக்கை

தனியாா் காகித ஆலை பிரச்னையில், திண்டுக்கல் தொழிலாளா் துறை இணை ஆணையா் தொடா்ந்து காலதாமதம் செய்து வருவதால், ஆணையா் நேரடியாக தலையிட்டு விரைந்து தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதுதொடா்பாக திண்... மேலும் பார்க்க

கொடைக்கானல் ஏரிச்சாலையில் லேசா் ஒளி கண்காட்சி

கொடைக்கானல் ஏரிச் சாலையில் நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்ட லேசா் ஒளி கண்காட்சிக்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் நிலவி வருவதையடுத்து, சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க