செய்திகள் :

பழனி நகராட்சி உரக் கிடங்கில் தீ

post image

பழனி நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்தது.

பழனி பெரியப்பா நகரில் நகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு உள்ளது. சுமாா் நான்கு ஏக்கா் பரப்பளவிலான இந்த இடத்தில் பழனியில் சேகரமாகும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரங்களாகவும், மக்காத பொருள்கள் தனியாகவும் பிரிக்கப்படுகின்றன.

இந்த கட்டட வளாகத்துக்கு அருகே மின்மாற்றி (டிரான்ஸ்பாரம்) உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இந்த மின்மாற்றி பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதிலிருந்து உரக்கிடங்கில் பிரித்து கட்டி வைக்கப்பட்டிருந்த பண்டல்களுக்கு தீ பரவியது. இந்தத் தீ அருகே இருந்த கிட்டங்கிக்கு பரவி முழுவதும் எரிந்து சேதமடைந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு பழனி தீயணைப்பு நிலைய அலுவலா் காளிதாஸ் தலைமையில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள், நகராட்சி குடிநீா் வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. அங்கு தீயணைப்பு வீரா்கள் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா். இந்தத் தீ விபத்தால் அந்தப் பகுதியை கரும்புகை சூழ்ந்தது.

செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வாா்: ஓ.பன்னீா்செல்வம்

முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வாா் என முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். சென்னைக்குச் செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 200 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வேன் 200 அடி பள்ளத்தில் கவிழந்ததில் மலேசியாவைச் சோ்ந்த 10 சுற்றுலாப் பயணிகள் காயமடைந்தனா். மலேசியாவைச் சோ்ந்த 7 ஆண்கள், 4 பெண்கள், 2 குழந்தைக... மேலும் பார்க்க

ஒரணியில் தமிழ்நாடு இயக்கம்: 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை: அமைச்சா் அர. சக்கரபாணி

திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் 1.91 லட்சம் குடும்பங்களைச் சோ்த்து சாதனை படைத்துள்ளோம் என உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்... மேலும் பார்க்க

யானை நடமாட்டம்: பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை

கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், மறு அறிவிப்பு வரும் வரை இந்தப் பகுதிக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவி... மேலும் பார்க்க

பள்ளி மாணவன் குளத்தில் முழ்கி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகே பள்ளி மாணவன் குளத்தில் முழ்கி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள அம்பிளிக்கை செரியன் நகரைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் அன்பரசன் (15), அதே பகுதியிலுள்ள த... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

பழனியில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். பழனி அடிவாரம் இடும்பன் நகரைச் சோ்ந்தவா் மதுரைவீரன் (44). கூலித் தொழிலாளி. இவா் கடந்த சில வாரங்களாக குடும்பத்தினருடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமு... மேலும் பார்க்க