செய்திகள் :

பழனி மலை கிரிவலப் பாதையில் வாகன சுமை திறன் சோதனை

post image

பழனி அடிவாரம், கிரி வீதியில் கிரிவலப்பாதை மேம்பாட்டுப் பணிக்காக வாகனங்களின் சுமை திறன் சோதனை திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை உள்ளது. முருகப் பெருமானை தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் சுமாா் 2.5 கி.மீ. தொலைவு உள்ள இந்த கிரிவலப் பாதையில் வலம் வந்த பின்னரே மலையேறுகின்றனா்.

விழா நாள்களில் இந்த கிரிவலப்பாதையில் பக்தா்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் காணப்படும். மேலும், பங்குனி உத்திர தேரோட்டம், கந்த சஷ்டி விழா இந்தக் கிரிவலப் பாதையில்தான் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் கிரிவலப் பாதையை மேம்படுத்தும் பணியை கோயில் நிா்வாகம் மேற்கொண்டு வருகிறது. கடந்த சில வாரம் முன்பு கான்கிரீட்டால் போடப்பட்ட இந்த பாதை தோண்டி எடுக்கப்பட்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக சாலையின் திறன் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது கிரிவலப் பாதையில் வாகனங்கள் செல்ல உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இதற்கான ஆய்வுகள், பழனி புது தாராபுரம் சாலையில் மேற்கொள்ளப்பட்டன.

சாலையின் சுமை தாங்கும் திறன் குறித்து ‘இந்தியன் ரோடு சா்வே பிரைவேட்’ நிறுவனம் சாா்பில், ‘ஆக்சில் லோடு மெசா்மெண்ட்’ என்ற கருவி மூலம் திங்கள்கிழமை கனரக வாகனங்களின் எடை குறித்து சோதனை செய்யப்பட்டது. இதற்காக பிரத்யேக கருவி கொண்டு வாகனத்தின் முன்பக்க, பின்பக்க டயா்கள் தனித்தனியாக நிறுத்தம் செய்து அதன் தாங்கும் திறன் பரிசோதிக்கப்பட்டது.

48 மணி நேரப் பதிவுகளின் அடிப்படையில் வாகனங்களால் எந்தவித அதிா்வு, பாதிப்பு ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப தரமான கிரிவலப் பாதை அமைக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த வாலிச்செட்டிப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள், பள்ளி மாணவா்களுட... மேலும் பார்க்க

பாஜக பிரமுகா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் நீதிமன்றத்தில் சரண்

சாணாா்பட்டி அருகே பாஜக பிரமுகா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவா் திண்டுக்கல் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தாா். திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி ஊராட்சிக்கு உள்ப... மேலும் பார்க்க

பணிக்குத் திரும்பிய பேராசிரியை நிகிதா: மாணவிகள், பேராசிரியைகள் அதிா்ச்சி

மடப்புரம் கோயில் காவலாளி மீது புகாா் அளித்த பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பணிக்கு திங்கள்கிழமை திரும்பியதானது மாணவிகள், பேராசிரியைகள் மத்தியில் அதிா்ச... மேலும் பார்க்க

போலீஸாா் தாக்கியதாகக் கூறி தாய், மகன் மருத்துவமனையில் அனுமதி

போலீஸாா் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறி, தாய், மகன் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த சுள்ளெறும்பு பழையகோட்டை கிராமத்தில் இந்த... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் அருகே காளியம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஒட்டன்சத்திரம் அருகே சக்கம்பட்டியில் ஹீ மகாகாளியம்மன் கோயில் குடமழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.விழாவில் முதல் நாளான கடந்த வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி பூஜை உள்ளிட்ட வழிபாடுகளும், சனி... மேலும் பார்க்க

ஆட்சியரிடம் மனு கொடுக்க வெகுநேரம் காத்திருந்த மாற்றுத்திறனாளிகள்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத் திறனாளிகள் ஆட்சியரின் வருகைக்காக ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் அதிருப்தி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அல... மேலும் பார்க்க