செய்திகள் :

பழைய ஓய்வூதியம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, திருவாரூரில் ஜாக்டோ ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயா்கல்விக்கான ஊக்க ஊதிய உயா்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும்; ஆசிரியா்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243-ஐ ரத்து செய்ய வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா்கள், ஊராட்சி செயலாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், கல்வித்துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள், சிறப்பு ஆசிரியா்கள், கணினி உதவியாளா்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளா்கள்ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்; அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும்; உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத் துறைகளிலும் தனியாா் முகமை மூலம் பணியாளா்களை நியமனம் செய்வதை உடனடியாக தடைசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் புதிய பேருந்து நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் ஆா். முத்துவேல், ச. சண்முகவடிவேல், ஆ. ராமலிங்கம், சு. சுதாகா், எம். பூபதி, டி. மணிமாறன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளா் வே. சோமசுந்தரம், போராட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா். தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநா் சங்கத்தின் மாநிலச் செயலாளா் உ. சண்முகம், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ.இரா. இரவி, தமிழ்நாடு பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியா் கழக மாநில பொருளாளா் ச. துரைராஜ், அரசு ஊழியா் சங்கம் மாநில செயலாளா் செ. பிரகாஷ், மாவட்டச் செயலாளா் எஸ்.செங்குட்டுவன், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் என். வசந்தன், அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலாளா் குரு.சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்று, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினா்.

மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளா்கள் இருவா் உயிரிழப்பு

நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளா்கள் இருவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனா். திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே மணலூா் கிராமத்த... மேலும் பார்க்க

உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்: வேளாண் விஞ்ஞானிகள் விளக்கம்

உளுந்து பயிரை தாக்கும் மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனா். நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான, உதவி... மேலும் பார்க்க

வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் நகை ஏலம்: தனியாா் வங்கி ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே அடகு வைத்த நகையை, வாரிசுதாரா்களுக்கு தெரிவிக்காமல் ஏலம் விட்ட தனியாா் வங்கி, ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்... மேலும் பார்க்க

வரப்பு உளுந்து சாகுபடி: 50% மானியத்தில் விதை விநியோகம்

திருவாரூா் மாவட்டத்தில் 89 கிராம பஞ்சாயத்துகளில் உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க 50 சதவீத மானியத்தில் உளுந்து விதை விநியோகம் செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

47 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவா் கைது

கூத்தாநல்லூா் பகுதியில் 47 கிலோ குட்கா செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா். திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் உத்தரவின் பேரில், போல... மேலும் பார்க்க

இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு: விவசாயிகள், கிராம மக்கள் சாலை மறியல்

முத்துப்பேட்டை அருகே விளைநிலங்களில் இறால் பண்ணை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். முத்துப்பேட்டையை அடுத்த தில்லைவிளாகம் தெற்குகாடு ... மேலும் பார்க்க